பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த 7 ஆம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் இந்த இரண்டில் எது சரியான ரிலீஸ் தேதி என்பதை படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு போலவே ‘வலிமை’ திரைப்படத்தின் படக்குழுவினரும் இரண்டு ரிலீஸ் தேதியை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 25 அல்லது மார்ச் 4 ஆகிய இரண்டில் ஒன்றில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படும் என்றும் குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் என்று தற்போது இருக்கும் நிலை மாறி 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை பொருத்தே ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.