Advertisement
மேட்டூர் அணை பூங்கா அருகே மீன் கடைகளில் வைத்திருந்த கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை; உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல்

 

சேலம்: மேட்டூர் அணை பூங்கா அருகே மீன் கடைகளில் வைத்திருந்த கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் பூங்காவிற்கு உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

 

 

அப்படி மேட்டூருக்கு வருபவர்கள் அணை மற்றும் பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு பூங்காவிற்கு எதிரே சாலையோரம் உள்ள சிற்றுண்டி கடைகளில் விற்கப்படும் மீன்களை விரும்பி சாப்பிடுவர். ஆனால் அந்த பகுதியில் மீன்கடை நடத்தி வருபவர்கள் மசால் கலந்த மீன்களை வாரக் கணக்கில் பதப்படுத்தி வைத்து விற்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் குமரகுருபன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் பூங்காவிற்கு எதிரே உள்ள சிற்றுண்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்போது கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி வாகனங்களில் ஏற்றினார்கள். இதற்கு மீன் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி வாகனத்தில் எடுத்துச் சென்று அழித்தனர். இதனால் மேட்டூர் அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST