தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துக்கு மத்தியில் இன்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்துக்கு மத்தியில் இன்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,675 ஆகவும், சவரன், ரூ.37,400 ஆகவும் இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.4,690ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,520ஆக ஏற்றம் கண்டுள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,690ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் விலை குறைந்த நிலையில் இன்று 2வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம் தொடர்ந்து 4வது முறையாக உயர்த்தப்பட்டது. இதனால் பல நாடுகளின் கரன்ஸிக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு கூட நேற்று வரலாற்றில் இல்லாத அளவு ரூ.80க்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது. பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்த்தப்படும் நிலையில் அதன் அறிவிப்பும் விரைவில் வர உள்ளது.
பெடரல் வங்கி வட்டி வீத உயர்வால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகரித்துள்ளதுவெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று, 20 பைசா அதிகரித்து ரூ.63.20ஆகவும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.63,200 ஆகவும் விற்கப்படுகிறது
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.