நாடு முழுவதும் பிரபலமான விருது பெற்ற பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமானவர் விக்ரமன் நாயர். அவர் 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். எனினும் திக்கொடியனின் ‘மகாபாரதம்’ நாடகத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்றார்.
இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கோழிக்கோடு குண்டுபரம்பா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சாமோத்திரி குருவாயூரப்பன் கல்லூரியில் படித்தார். பின்னர் சொந்த நாடகக் குழுவான ஸ்டேஜ் இந்தியாவைத் தொடங்கினார். சங்கமம் என்ற நாடகக் குழுவின் ஒரு அங்கமாகவும் இருந்தார்.
அவரது குறிப்பிடத்தக்க நாடகங்களில் ‘அக்ரஹாரம்’, ‘பொம்மகொலு’ மற்றும் ‘அம்பலகலா’ ஆகியவை அடங்கும். கேரளா சங்கீத நாடக அகாடமியின் மலையாள நாடகத்திற்கான அவரது பங்களிப்பிற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.