Advertisement
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. இன்று சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு அமர்வில், இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை, ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே, கோவாவில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்றிரவு மும்பை வந்தடைந்தார்.

கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சொகுசு பேருந்து மூலம் கொலாபா பகுதியில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய சிறப்பு சட்டப்பேரவை அமர்வில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ள நிலையில், தங்கள் கூட்டணிக்கு 170க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய சபாநாயகர் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே-பாஜக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் போட்டியிடுகிறார். சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் உத்தவ் தாக்ரேவின் விசுவாசியான ரஞ்சன் சால்வி போட்டியிடுகிறார்.

இன்று புதிய சபாநாயகர் தேர்வாகும் பட்சத்தில் நாளை அவரே நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னின்று நடத்துவார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பலம் 288ஆக உள்ள நிலையில், பாஜகவிடம் 106 எம்எல்ஏக்களும், ஏக்நாத் ஷிண்டேவிடம் சுமார் 50 எம்எல்ஏக்களும் உள்ளனர்.தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியிடம் 44 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மற்றும் சாகன் புஜ்பல் ஆகியோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் சிறையில் உள்ளனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த நால்வரும் வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு...” - பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

“இறுதி வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST