தென்னிந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது என்பதும் இதில் பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், ஒரு சில மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக தமிழ் திரையுலகை பொறுத்தவரை கமல்ஹாசன், வடிவேலு, த்ரிஷா உள்பட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தனக்கு கொரோனா அறிகுறி லேசாக இருப்பதாகவும் நேற்று இரவு முதல் தான் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களால் விரைவில் நான் குணம் ஆகி விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.