Advertisement
கையில் பகவத் கீதையுடன் மும்பையில் தோனி?

சாதாரண மனிதர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் உள்பட அனைவருக்குமே உடல் நிலை நல்ல நிலையில் இருப்பது என்பது எக்காலத்திலும் முக்கியமானது. அதிலும் கிரிக்கெட் போன்ற விளையாட்டில், உடற்தகுதி இருந்தால் மட்டுமே வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அணியில் உறுதி செய்யப்படும். 35 வயதை நெருங்கிவிட்டாலே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் வீரர்கள் ஏராளம். ஆனால், சொற்ப வீரர்களே அதையெல்லாம் முறியடித்து 40 வயதிலும் ஜொலிப்பர்.

அந்தவகையில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 41 வயதிலும், விக்கெட் கீப்பிங்கில் ஆகட்டும், ஃபீல்டிங் மற்றும் கேப்டன்ஷிப் ஆகட்டும், அவருக்கு நிகர் அவரே என்பதை நிரூபித்து வருகிறார். அதற்கு உதாரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை சொல்லலாம். நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்ட போதிலும், லீக் உள்பட அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று அணியை வழிநடத்தி, 5-வது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை பெற்று தந்தார் கேப்டன் தோனி. இந்த சீசன் முழுவதுமே தனது உடல்நிலை சற்று ஒத்துழைக்கவில்லை என்பதை நேரடியாகவே போட்டி முடிந்தப் பின்பு சொல்லியும் வந்தார்.

இந்நிலையில் கோப்பை வென்ற கையோடு எம்.எஸ். தோனி மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்களுக்காக பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும், பரிசோதனையின் முடிவிற்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக அதனை மேற்கொள்ள உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், அதனை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி அவர், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பையில் உள்ள விளையாட்டு எலும்பியல் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து, தேவையான ஆலோசனைகளைப் பெற உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “தோனி தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ப முடிவெடுக்க உள்ளார். அதுகுறித்து வெளியான தகவல் உண்மைதான். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யச்சொல்லி அறிவுறுத்தினால், பரிசோதனையின் முடிவுகளுக்கு ஏற்ப, அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை தோனியே முடிவு செய்வார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மினி ஏலத்திற்கு முன்னதாக அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தோனி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதா என்று அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு, “வெளிப்படையாக சொல்லப்போனால், இன்னும் அந்த ஸ்டேஜ்க்கு (Stage) நாங்கள் செல்லவில்லை என்பதால், அதுபற்றி எதுவும் தற்போது சிந்திக்கவில்லை. அதுமட்டுமின்றி அது முழுவதுமாக தோனியின் முடிவாகவே இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

5-வது ஐபிஎல் கோப்பை பெற்றப் பிறகு சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன், வீரர்களிடம் உரையாற்றினாரா என்றும், கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளதா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “என்.சீனிவாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், ஆனால் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெற இல்லை. அகமதாபாத்தில் இருந்து வீரர்கள் அவரவர் இடங்களுக்கு சென்றுள்ளனர். நீங்கள் சிஎஸ்கே அணியைப் பார்த்திருந்தால் தெரியும், நாங்கள் ஒருபோதும் கொண்டாட்டங்களில் பெரிதாக ஈடுபட்டதாக பார்க்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

முன்னணி வீரர்கள் காயங்களுடன் காணப்பட்டாலும், ஐந்தாவது ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அணியின் ஒட்டுமொத்த உத்வேகமே அது எல்லாத்துக்கும் காரணம். அத்துடன் எங்களது அணியில், ஒவ்வொரு வீரரும் அவர்களது பங்கை அறிந்து, அதற்கேற்றவாறு விளையாட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அணியில் புதிதாக வந்த பென் ஸ்டோக்ஸ் கூட அணியில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார். இவையெல்லாமே எங்கள் அணியின் கேப்டனால் சாத்தியமானது” என்று அவர் தெரிவித்தார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST