அதிரடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஹாப்பி! இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.40 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
உலக அளவில் ஆசிய நாடுகளில் தான் அதிக அளவு தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் தங்கத்தின் இறக்குமதி அதிகம். இந்த நிலையில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவற்றின் விளைவாக தங்கத்தின் விலை திடீரென உச்சம் தொட்டது. இதற்கு மத்தியில் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி மற்றும் வணிக வரி உயர்த்தப்பட்டது.
இதனால் தங்கத்தின் விலை சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கடந்த 1 மாதங்களாக உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் ஆபரண தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. தற்போது ஒரு சவரன் 40,000 ஐ தொடும் நிலைக்கு வந்து விட்டது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் பெண்களை கவலைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.39,360க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து 4,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.66.50ஆகவும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 சரிந்து ரூ.66,500 ஆக விற்பனையாகி வருகிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.