பிரபல பாலிவூட் இயக்குநர் பிரதீப் சர்க்கார் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த 2021ல் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானதில் இருந்து அவரது உடல்நிலை நலிவுற்று இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பாலிவூட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்..பாலிவூட் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, வித்யா பாலன், ராணி முகர்ஜி ஆகியோர் நேரில் சென்று இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். 2005இல் பரிணீதா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குநராக மாறினார்.
இந்த படத்தில்தான் இவர் முதன்முதலாக நடிகை வித்யா பாலனை பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.அதன் பிறகு ராணி முகர்ஜி நடித்த மர்தானி என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்று தற்போது மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தவிர வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்திய இவர் 4 வெப் சீரிஸ்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.