Advertisement
International Yoga Day: யோகாசனங்கள் செய்யும்போது செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன...


யோகா ஆசனங்களை செய்வதற்கு மிக அதிகப்படியான ஏற்பாடுகள் எதுவும் செய்யத் தேவையில்லை. அமைதியான ஒரு இடம், சௌகரியமான, தளர்வான ஆடை, விரிப்பதற்கு ஒரு தரை விரிப்பு ஆகியவை மட்டும் இருந்தாலே போதும். ஆனால் அதற்கான யோகாவை நீங்கள் நினைத்தபடி, நினைத்த நேரத்திற்கு செய்யக் கூடாது.

யோகாசனம் செய்யும் நாம் செய்யும் பொதுவாக தவறுகள் என்ன, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

அதிக வெப்பம், அதிக குளிர் அல்லது அதிக ஈரப்பதம் இருக்கும் நிலைகளில் யோகா ஆசனங்களை செய்யக் கூடாது. முடிந்தவரையில் காலை எழுந்ததும் யோகப்பயிற்சிகள் செய்வது தான் நல்லது.

யோகா செய்யும்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து பிறகு மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

சாப்பிட்டு முடித்தவுடன் யோகா செய்யக் கூடாது. ஒருவேளை சாப்பிட்டு இருந்தால் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு தான் செய்ய வேண்டும்.

சோர்வாக இருக்கும் போது யோகாசனங்கள் செய்யாதீர்கள். களைப்பாகவோ அசௌகரியமாகவோ இருக்கும்போது யோகாசனங்கள் செய்தால் அதனால் எந்த பயனும் இருக்காது.

சரியான வழிகாட்டுதலுடன் யோகா செய்யுங்கள்

யோகப் பயிற்சிகளை பயிற்சியாளரின் உதவியுடன் யோகாவை மேற்கொள்ளுங்கள். தனியாக யோகா பயிற்சியை மேற்கொள்ளாதீர்கள். அனுபவம் இல்லாமல் வெறும் வாசிப்பின் அடிப்படையில் யோகா செய்வது தசை இழுத்தல் அல்லது அசெளகரியத்திற்கு வழி வகுக்கும்.

யோகா செய்யும் போது இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள். இறுக்கமான மேல் ஆடைகள் அணிவது விலா எலும்பு மற்றும் நுரையீரலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தலாம், இது முழுமையற்ற சுவாசத்தை உங்களுக்கு ஏற்படுத்தும்.

யோகா செய்து முடித்ததும் உடனடியாகக் குளிக்கக்கூடாது. வியர்வை அதிகமாக இருந்தால் அது உலர்ந்த பிறகு குளிக்க செல்லுங்கள்.

மாதவிடாய் காலத்தில் சில ஆசனங்களைச் செய்யக் கூடாது. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் மிக எளிமையான சில ஆசனங்களை மட்டுமே செய்ய வேண்டும்.

யோகா செய்து முடித்தவுடனேயே கடினமாக உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது.

யோகாசனம் செய்யும்போது இடையில் அதிகமாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதிகப்படியாக தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிறு நிரம்பிய உணர்வு தூண்டப்பட்டு கனமானது போல இருக்கும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு...” - பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

“இறுதி வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST