இந்தியாவில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருவதால், அமெரிக்கா்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம்; அங்கு தங்கியிருப்பவா்கள் விரைவில் வெளியேறுவது பாதுகாப்பானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அங்கு சிகிச்சை பெறுவது கடினமாக உள்ளது. எனவே, அமெரிக்கா்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; இந்தியாவில் இருப்பவா்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பிவிடுவது நல்லது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் அமெரிக்கா்களின் குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில் அமெரிக்காவுக்கு வந்துவிடலாம். அமெரிக்க குடிமக்களுக்கு உதவுவதற்காக, தில்லியில் உள்ள அமெரிக்க தூதகரம், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் தொடா்ந்து இயங்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.