ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் தினமும் பல சலுகைகளும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படுகின்றன. இன்று ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா வலுவான பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்றது. வாடிக்கையாளர்கள் நோக்கியாவின் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க விரும்பினால், இன்று சரியான வாய்ப்பு வந்துள்ளது. இன்று, Nokia C21 Plus போனுக்கு ஒரு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜில் மூன்று நாட்கள் நீடிக்கும். ரூ.12,000 மதிப்புள்ள இந்த போனை இன்று வெறும் ரூ.59-க்கு வாங்க முடியும். இவ்வளவு குறைவான விலையில் இந்த போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.
பிளிப்கார்டில் Nokia C21 Plus: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
Nokia C21 Plus இன் அறிமுக விலை ரூ.11,999 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூ.9,799க்கு கிடைக்கிறது. இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு இந்த தொலைபேசியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது. இது தொலைபேசியின் விலையை கணிசமாகக் குறைக்கும்.
பிளிப்கார்டில் Nokia C21 Plus: வங்கிச் சலுகை
Nokia C21 Plus வாங்க, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 490 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.9,309 ஆக குறையும்.
பிளிப்கார்டில் Nokia C21 Plus: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
நோக்கியா சி21 பிளஸில் ரூ.9,250 மதிப்பிலான பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெற முடியும். எனினும் இந்த தள்ளுபடியை பெற வாடிக்கையாளர்கள் தாங்கள் மாற்றும் போனின் நிலை நன்றாக இருப்பதையும் போனின் மாடல் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ரூ.9,250 மதிப்பிலான முழு தள்ளுபடி கிடைக்கும்.
பிளிப்கார்ட்டில் நோக்கியா சி21 பிளஸ் போனில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் வாடிக்கைடாளர்கள் பெற முடிந்தால், வலுவான பேட்டரி கொண்ட இந்த அட்டகாசமான போனை வெரும் ரூ.59-க்கு வாங்கலாம்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.