காதலுக்கு மரியாதை’, ‘காற்று வெளியிடை’, ‘அலைபாயுதே’, ‘உள்ளம் கேட்குமே’, ‘கிரீடம்’, ‘மாமனிதன்’ உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், 300க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்திருப்பவர் கே.பி.ஏ.சி.லலிதா.
இவர் இயக்குனர் பரதனின் மனைவி. 73 வயதான லலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், கல்லீரல் தானம் கோரி அவரது மகள் குட்டி சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து லலிதாவின் தீவிர ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன் வந்துள்ளேன். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தகவல் சொல்லியிருக்கிறேன். எனக்கு 54 வயது. லலிதாவுக்கும், எனக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பதால் இந்த முடிவெடுத்தேன். எனக்கு மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ கிடையாது. அதனால் கண்டிப்பாக எனது கல்லீரல் அவருக்குப் பொருந்தும்’ என்றார்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.