Advertisement
ஏப்ரல் 5 வரை இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பக் காற்று மற்றும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இம்மாத இறுதி மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியின்படி,  புயல் சுழற்சி உள்ளிட்டவைகளால் அடுத்த சில நாட்களுக்கு இதமான தட்பவெட்ப சூழல் தரும் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த புயல் சுழற்சியானது தென்மேற்கு ராஜஸ்தானுக்கு மேல் உள்ளது.  எனவே, அடுத்த சில நாள்களுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுவை, கேரளா, மாஹே மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.இந்த மழை காரணமாக, வடக்கு, மத்திய மற்றும் தீபகற்ப மாநிலங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட குறைவாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை இன்று கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST