பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார். திருச்சூரில் நாடகத் துறையில் தீவிரமாக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார் பாபுராஜ் வாழப்பள்ளி. அதன்பின் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், சிஐஏ, மாஸ்டர் பீஸ், குண்டா ஜெயன், பிரேக்கிங் நியூஸ், மனோஹரம், அர்ச்சனா 31 நாட் அவுட் போன்ற பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும், காயம்குளம் கொச்சுன்னி, மின்னுக்கெட்டு, நந்தனம், ஐயப்பனும் வாவரும், தச்சோளி ஒத்தேனன், ஹரிசந்தனம், குஞ்சாலி மரக்கார் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பாபுராஜ் நடிப்பு, வசனம் எழுதுதல், கலை இயக்கம், தியேட்டர் டைரக்ஷன், லைட் டிசைனிங் என அனைத்து துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
திருச்சூர் வாழப்பள்ளியைச் சேர்ந்த பாபுராஜ் தனது குடும்பத்துடன் கோழிகோட்டில் உள்ள குதுருசால் என்ற பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மறைந்த பாபுராஜ் வாழப்பள்ளிக்கு சந்தியா என்ற மனைவியும் பிஷால் என்ற மகனும் உள்ளனர்.
பாபுராஜ் வாழப்பள்ளி மறைவை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.