நமது உடலில் இருக்கும் தசைகள்,உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்புகளின் பலம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனம் அடைவது இயல்புதான் என்றாலும் தற்காலத்தில் 30 வயதை நெருங்கிவிட்டாலே பலருக்கு எலும்பு தேய்மானம் வந்துவிடுகிறது. இதனால் பலரும் மூட்டு வலி, முதுகு வலி, கை வலி என வலிகளுக்குள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இப்படி எலும்புகள் பலவீனமடைவதை நாம் அன்றாடம் உண்ணும் பொருள்கள் மூலமாகவே தடுக்கலாம்.
சோயா பொருட்கள்:
எடமேம், டோஃபு, டெம்பே மற்றும் சோயா பானங்கள் போன்ற சோயா பொருட்களில் எலும்புகளை உருவாக்கும் புரதங்கள் அதிகளவில் உள்ளதால் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.
காய்கறிகள்:
முட்டைக்கோஸ், காலே, கீரை, ப்ரோக்கோலி போன்ற இலை வகை காய்கறிகளில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் என எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை உங்களுடைய அன்றாட உணவுமுறைகளில் சேர்த்துக் கொள்ளும்போது எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க மட்டுமில்லாமல் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.
கால்சியம் நிறைந்த பால், புரதம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளை நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சாப்பிட்டு வந்தால் நிச்சயம் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதோடு முறையான உடற்பயிற்சியும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம்.
பீன்ஸ்:
சுண்டல், கொண்டைக்கடலை, பட்டாணி, கருப்பு மொச்சை போன்ற பல வகைப் பயறுகளில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், உடலுக்குத் தேவையான ஊட்டசத்துக்களையும் வழங்கவும் உதவியாக உள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.