தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவர் பற்றிய ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சமீப காலங்களாக தன்னுடைய அம்மா, அப்பாவை கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் விஜயின் அம்மா, அப்பா பங்கு பெற்ற நிலையில் அவர்களை பெரிதாக விஜய் கண்டு கொள்ளவில்லை என கூறப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து விஜயை பற்றி சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இதில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜயின் அம்மா ஷோபா பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மிகவும் அருமையாக பாடல் பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றியம் கலந்துக் கொண்ட ஷோபா ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டது பற்றியும் கூறியுள்ளார்.
அதாவது விஜய்யிடம் ஒரு படத்திலாவது உனக்கு அம்மாவாக நடித்து விட வேண்டும் பா ஏதாச்சும் இருந்தா சொல்லு என கூறினாராம் அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அம்மா கரெக்டர் இருந்தாலும் நடிப்பதாக கூறியதற்கு விஜய் அது எல்லாம் வேண்டாமா.. நடிப்பு மட்டும் நினைச்சு கூட பார்க்காதீங்க.. உங்கள பாத்தாலே எனக்கு சிரிப்பு வந்துடும் என்னால நடிக்க முடியாது என விஜய் கூறுவாராம்.
மேலும் இவர்கள் இணைந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஜோசாலுகாஸ் நகை கடையின் விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இது குறித்தும் சோபாவும் கூறினார். இருந்தாலும் சோபா எப்படியாவது விஜயின் படத்தில் அம்மாவாக நடித்து விட வேண்டும் என நினைத்து வருகிறாராம்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.