2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் ரிலீஸாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அவதார் 2 திரைப்படம் தற்போது ஓடிடி-யில் ரிலீஸ் ஆகி உள்ளது.
பிரம்மாண்ட படங்களை இயக்கி உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருபவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் அவதார். கற்பனையின் உச்சமாக கருதப்படும் இப்படத்தின் மூலம் ரசிகர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். உலகளவில் சக்கைப்போடு போட்ட இப்படம் அந்த சமயத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் 290 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது.
அவதார் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த ஜேம்ஸ் கேமரூன், அதற்கான பணிகளிலும் இறங்கினார். சுமார் 13 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் அவர் அவதார் 2 படத்தை எடுத்து முடித்தார். அப்படத்துக்கு அவதார் தி வே ஆஃப் வாட்டர் எனவும் பெயரிடப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
அவதார் படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல் அவதார் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காட்சியமைப்பில் பிரம்மிப்பூட்டினாலும் திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவதார் படத்தை விட குறைந்த அளவிலான வசூலையே அவதார் 2 குவித்தது. இப்படத்துக்கு 230 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் இன்று (மார்ச் 28) முதல் அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் இனி வீட்டில் இருந்தபடியே ஜேம்ஸ் கேமரூனின் இந்த பிரம்மாண்ட படைப்பை பார்த்து ரசிக்கலாம். அவதார் 2 திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 4 மாதங்களுக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.