மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் யாருகெல்லாம் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.
80 லட்சத்திற்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாதந்தோறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். செப்டம்பர் முதல் மார்ச் வரை ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை என்று கூறினார்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.