Advertisement
உலக சர்க்கரை நோய் தினம் இன்று! இன்றைய தினத்தில் இந்நோய் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்! முழு விவரம் உள்ளே

சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்

கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.

மரபுரீதியில் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, படித்து படித்து சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதாகத் தெரியவில்லை. 35 வயதை தாண்டி விட்டாலே, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டும். ஆனால், 10 சதவீதம் பேர் கூட, ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது இல்லை. ஏதாவது பிரச்சனை என்று வந்த பிறகுதான் "லபோ திபோ' என அடித்துக் கொள்கிறோம். சர்க்கரை நோய் ஒளிந்திருந்து உயிரைக் குடிக்கும் நோய். உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் வசீகரமாக வாழலாம். இந்தியர்களுக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, மரபு ரீதியாக வாய்ப்பு அதிகம் என்பதோடு, வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ்மாற்றம், சுற்றுச் சூழலுக்கு மாறுபட்டு வாழும் போக்கு, சர்க்கரை சத்தை அதிகம் கொண்ட (பிசா, கோக், சாக்லேட்) உணவு வகைகளை அதிகமாக எடுப்பது, உடலுக்கு பயிற்சி இல்லாத அன்றாட வாழ்க்கை உள்ளிட்ட பலக் காரணங்களால், இந்தியர்கள் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்

தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரை, ரத்தக் குழாய்களை சேதப் படுத்துவதால் "ஸ்ட்ரோக்' என அழைக்கப்படும் பக்கவாதம் முதல், பாதம் பாதிப்பு வரை எல்லா உறுப்புகளையும் சர்க்கரை ஒரு கை பார்த்துவிடுகிறது. கண்ணில் விழித்திரை பாதிக்கிறது. இதய ரத்தக்குழாய்களை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கிறது. சிறுநீரக ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்கிறது. இதுதவிர, ஆண்மை குறைவு உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வேதனைகளையும் ஏற்படுத்துகிறது. நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை இருக்காது. இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?

துரதிஷ்டம் என்னவெனில், மற்ற நோய்களை போல் சர்க்கரை நோயை, அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. வேறு ஏதோ பிரச்சனைக்காக டாக்டரிடம் சிகிச்சைக்கு வரும்போது தற்செயலாக, ரத்த பரிசோதனை செய்யும் நிலையில், தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது பலருக்கு தெரிய வருகிறது. சாப்பிடுவதற்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு 60 முதல் 110 மி.கி., ஆக இருக்க வேண்டும். சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி.கி., வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம். கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம். பாரம்பரியத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் கூட, இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மாறுபட்ட உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்ற காரணங்களால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என, ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

ரத்தக் குழாயை பாதிப்பது எப்படி?

சர்க்கரையில் உள்ள ஒருவித ரசாயனம், ரத்தக் குழாய்களின் உள்புறத்தை அரித்து புண் ஏற்படுகிறது. இந்த புண் தானாக குணமடையும் நிலையில் தழும்புகள் ஏற்படுகின்றன. நாளடைவில், இந்த தழும்புகள் பெருகி, ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.

இரண்டு வகை

சர்க்கரை நோய் இரண்டு வகைப்படும். சிறு வயதில் வருவது இது "ஜுவனையில் டயாபடிக்' என அழைக்கப்படுகிறது. இது முதல் வகை சர்க்கரை நோய். வைரஸ் கிருமியால், கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் முழுமையாக சுரக்காமல் போய்விடும். அல்லது இன்சுலினுக்கு எதிரான ஆன்டிபாடீஸ், உடலில் உருவாகி இன்சுலின் சுரப்பு அடியோடு நின்றுவிடும். இது 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளையே பாதிக்கிறது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்திருக்க வேண்டும். முதல் வகை சர்க்கரை நோயாளிகள், 5 முதல் 7 சதவீதம் பேர் உள்ளனர். இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்பது 40 வயதுக்கு மேல் வருவது. குழந்தை பருவத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்கும். ஆனால், 35, 40 வயதை தாண்டும் நிலையில், இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரும். இப்போது 30 வயதிலேயே இரண்டாவது வகை சர்க்கரை நோயாளிகளை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரை நோய் உறுதி செய்யப்பட்டுவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, மாத்திரையோ அல்லது இன்சுலின் ஊசியோ தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு சர்க்கரை நோயாளி எடுக்கும் மாத்திரைகளை நாம் எடுக்கக் கூடாது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொறுத்து எந்த மாத்திரை, எவ்வளவு அளவு என்பது தீர்மானிக்கப்படுவதால் டாக்டரின் பரிந்துரைபடியே மாத்திரை எடுக்க வேண்டும்.

அறிகுறிகள்

சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும், தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி தாகம் ஏற்படும். அதிகமாக பசி ஏற்படுதல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறிகளாக கருதலாம். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் இதயம், சிறுநீரகம், கண்கள், கால்களில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உணவுக் கட்டுப்பாடு

மாத்திரை எவ்வளவு முக்கியமோ அந்தளவு உணவு கட்டுப்பாடும் மிக முக்கியம். உணவு கட்டுப்பாடு என்றால் பத்தியம் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் அல்ல. தங்களது நோயின் தன்மை, வயது, எடை, இளம் பெண்களாக இருந்தால் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை, அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை சத்தை ரத்தத்தில் அதிகமாக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு கிழங்குகள், மா, பலா, வாழை, பேரிச்சை, திராட்சை, சப்போட்டா போன்ற பழ வகைகள், குளிர் பானங்கள், ஐஸ் கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில், கண்டிப்பாக டாக்டரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். இனிப்பு சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. எப்போதோ ஒரு பண்டிகை நாளில் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு, கூடுதலாக ஒரு மாத்திரை போடுவதில் தவறில்லை. ஆனால், அடிக்கடி அப்படி செய்வது நல்லதல்ல.

தாழ் சர்க்கரை நிலை

மாத்திரை அல்லது இன்சுலின் அளவு சற்று கூடிவிட்டால் சில நேரங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைந்துவிடும். இதற்கு தாழ் சர்க்கரை நிலை என்று பெயர். தாழ் சர்க்கரை நிலை இருந்தால் நெஞ்சு படபடப்பு, பசி, "சில்' என வியர்த்தல், மயக்கம், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக சாக்லேட், இனிப்பு மிட்டாய்கள், சர்க்கரை கலந்த தண்ணீர் சாப்பிட வேண்டும்.

கால் பாதுகாப்பு

சர்க்கரை நோயாளிகள் கால்களை பாதுகாப்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகளுக்கு கால் நரம்புகள், ரத்தக்குழாய்கள் பாதிப்புக்குள்ளாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ரத்தம் தடைபட்டு, கால்களில் உணர்வு குறையும். காயங்கள் ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. வலி தெரியாது என்பதால், காயத்தை நாம் பொருட்படுத்த மாட்டோம். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுவதால், புண் ஆறாமல் சீல் கோர்க்கும். ரத்த ஓட்டம் குறைவதால் கால்கள், விரல்கள் கறுத்து போய் அழுகிப் போவதால் விரலை அல்லது காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எனவே, சர்க்கரை நோயாளிகள் கால் களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்காக பிரத்யேக காலணிகள் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST