இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டமான திரைப்படமான பொன்னியின் செல்வனின் பட இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன் படி , அக நக என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாடல் மார்ச் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார் மற்றும் இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்பாடல் மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கும் போஸ்டரில், த்ரிஷா மற்றும் கார்த்தி இடம் பெற்று உள்ளனர். த்ரிஷா கையில் வாளைப் பிடித்தபடி ராஜாங்கமாகத் தோற்றமளிக்கும் போது, கார்த்தி கண்ணை துணியால் கட்டி முழங்கால்களை மடக்கி படகில் முட்டிப்போட்டு இருக்கிறார்.
அக நக பாடலின் பிஜிஎம் ஏற்கனவே சமூக ஊடகங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உள்ளது. இந்த பாடல் அடிக்கடி ரீல்களில் பயன்படுத்தப்படுகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் தனது சமூக ஊடகங்களில், "அக நக பாடலின் மாயாஜாலத்தை அனுபவிக்க தயாராகுங்கள். இப்பாடல் மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும். காத்திருங்கள்! ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.