இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து தனுஷூடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார்.
இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்றும், மிகவும் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்து உள்ளது.
ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகின. அதில், ராசா கண்ணு என்ற பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளும், வடிவேலுவின் குரலும் ரஹ்மானின் இசையும் மக்கள் மனதை வென்று உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.