18 முதல் 55 வயதுடைய 1240 பேரை தேர்வு செய்து ஒமைக்ரானின் புதிய தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது
18 முதல் 55 வயதுடையவர்களை ஈடுபடுத்தி தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி திறன் ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா, ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும் என்று தெரிவித்தார்.