Advertisement
இதயக்குழல் நோய்களை எவ்வாறு தடுப்பது? மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்! முதல் உதவி எவ்வாறு செய்வது!

நடத்தை ஆபத்துக் காரணிகளை சரிசெய்வதன் மூலம் பல இதயக்குழல் நோய்களைத் தடுக்க முடியும்.

ஆரோக்கிய உணவை உண்ணவும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்பற்ற இறைச்சிகள், மீன் போன்ற உணவுகளால் உங்கள் தினசரி உணவைச் செறிவூட்டுங்கள். விலங்கு கொழுப்பு, சீனி மற்றும் உப்பைக் கட்டுப்படுத்துங்கள்.

புகைக்காதீர். புகைப்பவர் அருகில் நிற்காதீர்.

தொடர்ந்து உடல் பயிற்சி செய்யவும். இதய துடிப்பு விகிதத்தையும் சுவாசத்தையும் அதிகரிக்க தினமும் 30 நிமிடம் நடக்கவும். உடல் செயல்பாடு நோய் ஆபத்தைக் குறைக்கும்.

மிகை இரத்த அழுத்தம்: மாரடைப்பை உண்டாக்கும்
இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு இருந்தால்
இரத்தக் கொலஸ்ட்ரால்: மிகை கொலஸ்ட்ரால் மாரடைப்பை உண்டாக்கும்
மருந்துகளைக் கவனமாக உட்கொள்ளவும்: மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து உட்கொள்ளவும்.

உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்: உங்கள் நலத்துக்காகவும் உங்கள் குடும்ப நலத்துக்காகவும் நீங்கள் செய்வது குறித்துப் பெருமைப்படவும்.

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி அறியவும்:

சில நிமிடங்கள் நீடிக்கும் நெஞ்சின் நடுவில் மெல்லிய வலி அல்லது அசௌகரியம்
ஒரு அல்லது இரு புயங்கள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம்
மூச்சடைப்பு , குளிர் வியர்வை, குமட்டல், கிறக்கம்

முதல் உதவி எவ்வாறு செய்வது!

நோயாளியை உட்கார வைக்கவும் அல்லது அவருக்கு மிகவும் ஏற்ற நிலையில் வைக்கவும்
இறுகிய ஆடைகளைத் தளர்த்தவும்
நைட்ரோகிளிசரின் போன்ற இதய பிரச்சினைகளுக்கான நெஞ்சுவலி மருந்து உட்கொண்டு வந்தால் அதை உட்கொள்ள உதவவும்.
ஓய்வில் அல்லது நைட்ரோ கிளிசரின் உட்கொண்டு 3 நிமிடங்களில் வலி நிற்கவில்லை என்றால் அவசர மருத்துவ உதவியை நாடவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST