Advertisement
'பந்தை சேதப்படுத்திய ஆஸி'...மீண்டும் சர்ச்சை!!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய ஆகிய அணிகள் மோதி வருகின்றன. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 469/10 ரன்களை சேர்த்தது.

இந்திய இன்னிங்ஸ்:

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள இந்திய அணியில் முதல் 4 பேட்டர்களில் யாருமே 20 ரன்களை கூட தொடவில்லை. ரோஹித் ஷர்மா 15 (26), ஷுப்மன் கில் 13 (15), சேத்தேஸ்வர் புஜாரா 14 (25), விராட் கோலி 14 (31) ஆகியோர் படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா ஓரளவுக்கு அதிரடியாக விளையாடி 48 (51) ரன்களை எடுத்தார். அடுத்து, அஜிங்கிய ரஹானே 29 (71) மற்றும் கேஎஸ் பரத் 5 (14) ஆகியோர் களத்தில் இருந்தபோது, இரண்டாவது நாள் முடிவுக்கு வந்தது.

மூன்றாவது நாள்:

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளின், இரண்டாவது பந்திலேயே கேஎஸ் பரத்தை 5 (15) போலந்த் போல்ட் ஆக்கினார். அடுத்து, ரஹானே ஷர்தூல் தாகூர் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு ஏற்பட ஆரம்பித்தது. இந்நிலையில், ரஹானே 89 (129) மற்றும் ஷர்தூல் தாகூர் 51 (109) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.

அடுத்து டெய்ல் என்டர்ஸ் நிலைத்து நின்று விளையாடவில்லை. உமேஷ் யாதவ் 5 (11), முகமது ஷமி 13 (11) இருவரும் வந்த வேகத்தில் நடையைப் கட்டினார்கள். இதனால், இந்திய அணி 296/10 ரன்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸ்:

173 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஓபனர்கள் கவாஜா 13 (39), டேவிட் வார்னர் 1 (8) இருவரும் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 34 (47), ட்ராவிஸ் ஹெட் 18 (27) ஆகியோரது விக்கெட்களை ஜடேஜா எடுத்துக் கொடுத்தார்.தற்போது மார்னஸ் லபுஷேன் 41 (118), கேமரூன் கிரீன் 7 (27) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி 123/4 ரன்களை சேர்த்து, 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பந்தை சேதப்படுத்தினார்கள்?

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பந்தை சேதப்படுத்தி, விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திவிட்டார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில், ''விராட் கோலியை ஆட்டமிழக்க செய்ய ஸ்டார்க் வீசிய பந்து அவரது கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது பளபளப்பான பக்கம் வெளியே இருந்தது. ஆனால், பந்து அதற்கு நேர்எதிராக திரும்பியது. பந்தை சேதப்படுத்தவில்லை என்றால், அது எப்படி சாத்தியம்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

நிச்சயம் இது விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. ஆகையால், ஐசிசி இதுகுறித்து உடனே ஆலோசனை நடத்தும் எனக் கருதப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது, தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு...” - பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

“இறுதி வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST