Advertisement
பிரபல எழுத்தாளார் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

சமூக செயற்பாட்டாளர் லிங்கன் நேற்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.

கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்டவர் எழுத்தாளர் லிங்கன். இவர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் கலை இலக்கிய பெருமன்றத்தில் பணியாற்றி வந்தார். பொதுவுடமை சிப்பி சிங்காரவேலரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை தனது வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தார். 

இவர், பொதுவாக சென்னையில் நடக்கும் அனைத்து போராட்டங்கள் ஜனநாயக கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொண்டிருப்பார். மீனவர்களின் பிரச்சனை பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை பற்றியும் பல்வேறு சிறு நூல்களை லிங்கன் எழுதியுள்ளார்.

வழக்கறிஞராக இருந்த லிங்கன், பொதுவாக நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்த்து போராட்டங்கள், மனித உரிமை செயல்பாடுகள், உண்மை கண்டறியும் குழுக்கள் என 25 ஆண்டு காலத்தை பொதுமக்களுக்காகவே செலவிட்டார். திருமணம் செய்து கொள்ளாத இவர், நேற்று மாராடைப்பால் காலமானார்.

இவரது உடல் நாளை மண்ணடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST