Advertisement
இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

31.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.05.2023 மற்றும் 31.05.2023: இலட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

 

 

01.06.2023 மற்றும் 02.06.2023: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இளையங்குடி (சிவகங்கை மாவட்டம்) 7, சிறுகுடி (திருச்சி மாவட்டம்) 6, ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்), ராஜபாளையம் (விருதுநகர் மாவட்டம்), பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்), நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்) தலா 5, வைகை அணை (தேனி மாவட்டம்) 4, ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்), பாலமோர் (கன்னியாகுமரி மாவட்டம்), அரண்மனைப்புதூர் (தேனி மாவட்டம்) தலா 3, மோகனூர் (நாமக்கல் மாவட்டம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்), சூரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்), செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்),

 

 

ஆயிக்குடி (தென்காசி மாவட்டம்), உதகமண்டலம் (நீலகிரி மாவட்டம்), அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்), கெட்டி (நீலகிரி மாவட்டம்) தலா 2, உப்பர் அணை (திருப்பூர் மாவட்டம்), திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி மாவட்டம்), வத்தலை அணைக்கட் (திருச்சி மாவட்டம்), தென்பரநாடு (திருச்சி மாவட்டம்), திருமூர்த்தி ஐபி (திருப்பூர் மாவட்டம்), TNAU கோவை (கோயம்புத்தூர் மாவட்டம்), சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்), வால்பாறை பிஏபி (கோவை மாவட்டம்), திற்பரப்பு (கன்னியாகுமரி மாவட்டம்), கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), நாலுமூக்கு (திருநெல்வேலி மாவட்டம்), வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்), கிணத்துக்கடவு (கோவை மாவட்டம்) மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்), வீரபாண்டி (தேனி மாவட்டம்), கொடவாசல் (திருவாரூர் மாவட்டம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர் மாவட்டம்), என்ஐஓடி பள்ளிக்கரணை ஏஆர்ஜி (சென்னை மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST