ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஆட்டம் மழை காரணமாக திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு யாருமே எதிர்பாராத வகையில் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் போட்டி சுமார் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு 9 மணிக்கு மைதானத்தில் நடுவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். மைதானத்தின் தன்மை மிகவும் மோசமானதாக இருப்பதால் போட்டியை திட்டமிட்டபடி 12:06க்குள் தொடங்க முடியாது என மைதான ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் வேறு வழி இன்றி ஐபிஎல் இறுதிப் போட்டியை ரிசர்வ் டே ஆன திங்கட்கிழமை நடத்தலாம் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் திங்கட்கிழமையும் போட்டி நடைபெறும் சூழல் இல்லாதபட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு இறுதிப்போட்டியை காண ஆவலுடன் திரண்டிருந்த சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.