வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதேபோல, விழுப்புரத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. விழுப்புரத்தைச் சுற்றியுள்ள கானை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதையடுத்து, ஐஸ் கட்டிகளை சேகரித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் அரை மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், நகர்ப்பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ததால், குளுமையான சூழல் நிலவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.