உயிரிழந்த தனது மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவராத ஆத்திரத்தில் பூஜை செய்த பூசாரியை கணவர் கொலை செய்த பரபரப்பு சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மான்டவி என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலை வயதான நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த நபர் பிவா வைதா என்றும் அவர் ஒரு பூசாரி என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவிக்களை ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சி உண்மை அம்பலமானது. பூசாரியை கொலை செய்த நபர் வினோத் என்ற 34 வயது நபர் என்று கண்டுபிடித்தனர்.
இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2017இல் ஒரு வாட்ச்மேனை கொலை செய்த வழக்கில் வினோத் சிறைக்கு சென்றனவர். கோவிட் காலத்தில் இவர் ஜாமீன் பெற்று இரண்டு ஆண்டுகளாக வெளியே உள்ளார்.
இவரது மனைவி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த தனது மனைவியை மந்திரீக பூஜைகள் மூலம் மீண்டும் உயிருடன் கொண்டு வர வேண்டும் என அந்த பூசாரியை அணுகியுள்ளார். பூசாரியும் இவரிடம் ரூ.2,000 பெற்றுக்கொண்டு பூஜைகளை செய்துள்ளார்.
மனைவி உயிருடன் வராத நிலையில், பூசாரியிடம் சென்று தகராறு செய்த வினோத் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பூசாரி பணத்தை தராத நிலையில், ஆத்திரமடைந்த வினோத் பூசாரியின் தலையை கல்லின் மீது மோதி கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். வினோதை கைது செய்த காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.