திரைத்துறையைப் பொறுத்த வரையில் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், காமெடி நடிகர்கள் என்று ஆளாளுக்கு ஒரு துறையைச் சொல்வார்கள். கேப்டன் ஆஃப் த ஷிப் இயக்குநர் தான் என்று பெருமை பேசலாம். ஆனா, அந்த கேப்டனை கப்பல் ஓட்ட விடுவதும், தலைக்குப்புற தள்ளுவதும் ரசிகர்கள் கைகளில் தான் இருக்கு.
இப்படித்தான் ஒருத்தரு, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காட்டியிருக்கேன்னு வாய் வார்த்தை விட, கொஞ்ச நாள் அதிகமா ஓடியிருக்க வேண்டிய படத்தை ரிலீசான அன்னைக்கே தியேட்டைரை விட்டு ஓட வெச்சாங்க ரசிகர்கள்.
இப்போ எதுக்கு இந்த பில்டப் என்கிறீர்களா? விஷயம் இருக்கு. சமயங்களில் ரசிகர்கள் செய்கிற போஸ்டர் டிசைன், மீம்ஸ் எல்லாம் ஒரு படத்தை விட அதிகளவு கற்பனையோடவும், ரசிக்கிற மாதிரியும் இருக்கும். அப்படித்தான் இப்போது தளபதி 68 படத்தை இயக்கும் வெங்கட் பிரபுவைக் கலாய்த்து ஒரு மீம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நேரத்தில், அடுத்ததாக, ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படம் என்பதால், படத்தின் பட்ஜெட்டும், தரமும் அதிகரித்துள்ளது.
பகவதி படத்தில் விஜய்யின் டீக்கடையில் வேலை செய்யும் வடிவேலு, தன் ஊர்க்காரரான சிங்கமுத்துவை பார்த்ததும் டீ குடிக்க அழைப்பார். அப்போது சிங்கமுத்து தனது ஒட்டுமொத்த ஊர்க்காரர்களையும் கூப்பிட, விஜய், சிங்கிள் டீ கேட்ட, அலோ பண்ணேன். இப்போ ஊரே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கு என காண்டாவார். இதனை வடிவேலு ஏஜிஎஸ் எனவும், வெங்கட் பிரபுவவை சிங்கமுத்து எனவும் மாற்றி வீடியோ மீம் உருவாக்கியுள்ளனர். வெங்கட் பிரபு அழைக்க, பிரேம்ஜி, வைபவ், மஹத், சிவா, ஜெய் என அவரது பட நடிகர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.