நடிகரும் இயக்குனருமான திருசெல்வம், 'மெட்டி ஒலி' சீரியலில் ஞானராஜ் வேடத்தில் நடித்து பின்னர் கோலங்கள் சீரியலை இயக்கினார். இப்போது மற்றொரு பிரபல சீரியலான எதிர்நீச்சல் நடிகர்களுடன் இணைந்துள்ளார்.
சீரியலுக்கு நெருக்கமான ஒருவர் முன்னணி ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், "ஜீவானந்தம் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் திருசெல்வம் நடிக்கவிருக்கிறார். விரைவில் அவர் சீரியலில் இணைவார். அவரது வருகை மூலம், பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் அதிக சுவாரஸ்யத்தைப் பார்ப்பார்கள்" என்றார்.
எதிர்நீச்சல் சீரியலில் இணைவது குறித்து நடிகரும் இயக்குனருமான திருசெல்வம் பேசுகையில், "எதிர்நீச்சல் என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் இணைவதில் ஆவலாக உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளேன். ஜி.மாரிமுத்து, கனிகா மற்றும் பிரியதர்ஷினி நீலகண்டன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். எனது புதிய பயணத்தில் அவர்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
எதிர்நீச்சல் பிப்ரவரி 2022 முதல் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொலைக்காட்சித் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன் மற்றும் ஹரிப்ரியா இசை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி. மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ் பிகே, விபு ராமன், சத்தியா தேவராஜன், பாம்பே ஞானம், மோனிஷா விஜய், ரித்திக் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ரத்தினம், ஃபர்சானா அன்சாரி, வைஷ்ணவி நாயக், சோம் சௌமியன், கீர்த்தனா மற்றும் வி.ஜே.தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் தொடரை வி.திருசெல்வம் எழுதி இயக்குகிறார்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.