சனிப்பெயர்ச்சி; யந்திர வடிவில் அருள்பாலித்த சனீஸ்வரன்.. பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை ; ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவிலில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு யந்திர வடிவில் சனீஸ்வரன் பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தரகளுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு மிக்க கோவிலில் இன்று சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்றது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து மாலை 5:20 மணிக்கு கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதனை முன்னிட்டு காலை முதல் பரிகார ஹோமம், தீபாராதனை நடைபெற்றன. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம், விருச்சகம், மகரம், மீனம் ராசிகளை உடையவர்கள் பரிகாரம் செய்து வழிபட்டனர். யந்திர வடிவில் சனீஸ்வரன் பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தரகளுக்கு காட்சியளித்தார்
இன்று மாலை 5.20 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இந்த நன்னாளில் சனி பகவானை தரிசனம் செய்தால் தொல்லை நீங்கும் என்று நம்பி மக்கள் திருநள்ளாறு கோயிலில் குவிந்து வருகின்றனர். திருநள்ளாறு வரை செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சனி பகவானுக்கு பூஜைகள் செய்யலாம். கறுப்பு எள், நல்லெண்ணெய் வைத்து சனி பகவானை மனதில் நினைத்து வழிபடுங்கள்
எப்போதும் நம்மை தொடரும் ஒரே பிரச்சினை எனில் அது பணம் தான் நம் வீடுகளில் தினம் தினம் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படையாக விளங்குவது பணம் தான். . பணம் இருந்தாலே பாதி பிரச்சனை சரியாகி விடும். ஆகையால் பணம் தடையில்லாமல் நம்மை வந்து சேரவும் வருமானத்திற்கு வழி தேடிக் கொள்ளவும் முதலில் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியுடன் செய்ய வேண்டிய எளிய பரிகார வழியை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்....
விரிவாக படிக்க >>கும்ப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் விருப்பங்கள் நிறைந்த நாளாக அமையாது. அனைவர் முன்னிலையிலும் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகள் பெறுவீர்கள். சுமுகமான முறையில் துணையிடம் பேசுவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். உங்களின தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே நிதிநிலை இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கிறது. ஆகையால் எதிலும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகச் சூழல் திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது. கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு இழந்து காணப்படும். நாளை வரவும், செலவும் கலந்த நாளாக இருக்கும்.
நாளை நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருந்தாலும் மனக் குழப்பம் சிறிது காணப்படும். பணியிடத்தில் உங்களுக்கான இடத்தினை பெற திறம்பட செயல்படுவது என்பது முக்கியம். துணையிடம் நட்பான முறையில் பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். நடுநிலையுடன் நாளை நிதிநிலை இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சிறந்த நாளாக அமையாத காரணத்தினால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நாளை சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது கால தாமதம் ஏற்படலாம். துணையிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. நாளை தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக அமையாது. அதனால் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவது மன அமைதியை அளிக்கும். துணைவியிடம் பேசும் போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பேசுவது நல்லது. மேலும் நாளைய நாளை பொறுத்தவரை பண வரவு என்பது குறைவாக இருந்தாலும் செலவுகள் சற்று அதிகமாக காணப்படும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான பலன்களை அளிக்காது. நாளை பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதனால் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவது சிறந்தது. உங்களின் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வது மிக மிக அவசியம். நாளை செலவுகள் அதிகம் காணப்படுவதால் உங்கள் சேமிப்பு குறையலாம். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.