Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

Constipation, blood pressure, cholesterol should be solved all problems?

மலச்சிக்கல், ரத்த அழுத்தம், கொலஸடிரால்னு எல்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கணுமா?

​தெளிவாக கண் பார்வைக்கு​

கருப்பு உலர் திராட்சை ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளைக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் போன், கம்ப்யூட்டரில் நேரத்தை செலவழிப்பவர்களுக்கு இயற்கையாகவே கண் பார்வையில் பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும் கண் வறட்சி ஏற்படும். சில குழந்தைகள் சிறுவயதிலேயே கண்ணுக்கு கண்ணாடி போடுவார்கள். இவர்கள் தொடர்ச்சியாக கருப்பு உலர் திராட்சையை எடுத்துக் கொண்டு வரும்போது கண் பார்வை தெளிவாகும்.

ரத்த அழுத்தம் சீராகும்​

உயர் ரத்த அழுத்தமாக இருந்தாலும் சரி, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தாலும் சரி, இரண்டையும் சீர்செய்யும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு.

இதிலுள்ள பாலிபினைல்கள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவி செய்யும்.

​வறட்டு இருமல் குறைய​

பருவ காலங்களில் உண்டாகும் இருமல், வறட்டு இருமல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணியாக கருப்பு உலர் திராட்சை இருக்கும்.

வறட்டு இருமல் உண்டாகும் நேரங்களில் 4 உலர் திராட்சையை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட வறட்டு இருமல் நீங்கும்.

​உடல் எடை குறைய​

தினமும் 6 கருப்பு உலர் திராட்சை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அதை சாப்பிட்டு வர, உங்களுடைய உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

உடலின் மெட்டபாலிசம் சீராகி, வேகமாகவும் ஆரோக்கியமாகவும் உடல் எடை குறைய உதவி செய்யும்.

​வாய் ஆரோக்கியம்​

சிலருக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலும் வாயில் கெட்ட துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். இதுபோன்று வாய் துர்நாற்றப் பிரச்சினை உள்ளவர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு கருப்பு திராட்சை ஊறவைத்த நீரைக் குடித்து வரலாம்.

அதோடு துர்நாற்றம் வீசுவது போல உணரும் சமயத்தில் இந்த கருப்பு திராட்சையை வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

​மலச்சிக்கலை தவிர்க்க​

குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்தால் தான் குடல் இயக்கம் சீராக இருக்கும். மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினை உண்டாகாமல் இருக்கும்.

ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்சினையைச் சரிசெய்து மலச்சிக்கல் வராம தடுக்க கருப்பு திராட்சை உதவி செய்யும் . தினமும் காலை வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு , அந்த நீரைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் கட்டுக்குள் இருக்கும்.

​​அனீமியாவை சரிசெய்யும்​

கருப்பு திராட்சையில் இரும்புச் சத்து மிக அதிகம். இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக அனீமியாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தவிர்க்க தினமும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சை 10 என்கிற அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

​​வெர்டிகோவுக்கு தீர்வு தரும்​

சிலருக்கு வெர்டிகோ பிரச்சினை இருக்கும். திடீரென தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை சரிசெய்ய கருப்பு திராட்சை மிகச்சிறந்த வீட்டு வைத்தியம் என்றே சொல்லலாம்.

தொடர்ச்சியாக கருப்பு திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த அழுத்தம் சீரடைவதோடு வெர்டிகோ பிரச்சினை படிப்படியாகக் குறைவதை உணர்வீர்கள்.

​​சரும பொலிவு, ஆரோக்கியமான தலைமுடி​

கருப்பு திராட்சையில் நிறைய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை செல்களில் ஏற்படும் சேதத்தை குறைத்து சருமத்தைப் பொலிவாக மாற்றும் தன்மை கொண்டிருக்கிறது.

முகத்தில் இருக்கிற சுருககங்கள், நுண்ணிய கோடுகள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும். வைட்டமின் ஏ மற்றும் ஈ, சி ஆகியவை தலைமுடி மற்றும் சருமத்துக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும்.

​பெண்கள் ஆரோக்கியத்துக்கு​

பெண்கள் ஆரோக்கியத்தில் கருப்பு திராட்சைக்கு மிக முக்கியப் பங்குண்டு. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். குறிப்பாக, ஒவ்வொரு மாதவிடாயின் போது ரத்தக் கழிவுகளை முறையாக வெளியேற்றி. கருப்பையை சுத்தம் செய்யும் ஆற்றல் இந்த கருப்பு திராட்சைக்கு உண்டு.

இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும் அனீமியாவை சரிசெய்ய உதவுகிறது. மேலும வைட்டமின் ஏ, சி, ஈ ஆகியவை உள்ளன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Take these foods to protect your bones!!

எலும்புகளை பாதுகாக்க இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!!

நமது உடலில் இருக்கும் தசைகள்,உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்புகளின் பலம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனம் அடைவது இயல்புதான் என்றாலும் தற்காலத்தில் 30 வயதை நெருங்கிவிட்டாலே பலருக்கு எலும்பு தேய்மானம் வந்துவிடுகிறது. இதனால் பலரும் மூட்டு வலி, முதுகு வலி, கை வலி என வலிகளுக்குள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இப்படி எலும்புகள் பலவீனமடைவதை நாம் அன்றாடம் உண்ணும் பொருள்கள் மூலமாகவே தடுக்கலாம்.

சோயா பொருட்கள்:

எடமேம், டோஃபு, டெம்பே மற்றும் சோயா பானங்கள் போன்ற சோயா பொருட்களில் எலும்புகளை உருவாக்கும் புரதங்கள் அதிகளவில் உள்ளதால் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.

காய்கறிகள்:

முட்டைக்கோஸ், காலே, கீரை, ப்ரோக்கோலி போன்ற இலை வகை காய்கறிகளில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் என எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை உங்களுடைய அன்றாட உணவுமுறைகளில் சேர்த்துக் கொள்ளும்போது எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க மட்டுமில்லாமல் உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.

 

கால்சியம் நிறைந்த பால், புரதம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளை நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சாப்பிட்டு வந்தால் நிச்சயம் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதோடு முறையான உடற்பயிற்சியும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியம்.

பீன்ஸ்:

சுண்டல், கொண்டைக்கடலை, பட்டாணி, கருப்பு மொச்சை போன்ற பல வகைப் பயறுகளில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், உடலுக்குத் தேவையான ஊட்டசத்துக்களையும் வழங்கவும் உதவியாக உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Karthika Deepam Special Sweet Appam Recipe

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இனிப்பு அப்பம் ரெசிபி

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் இனிப்பு அப்பம் எண்ணெய் பிடிக்காமல், நல்ல மிருதுவாக எப்படி செய்வது என்பதை பாருங்கள்

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி- 1 கப்

உருட்டு உளுந்து பருப்பு- அரை டேபிள்ஸ்பூன்

துவரம் பருப்பு- 1 டீஸ்பூன்

வாழைப்பழம்- 1

துருவிய தேங்காய்- அரை காப்

வெல்லம்- 1 கப்

செய்யமுறை

அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் வெல்லம் போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து கரைக்க வேண்டும். பாகு காய்ச்ச கூடாது. வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்கவும்.

பச்சரிசி, உளுந்து, துவரம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் ஊறவைத்த தண்ணீரை வடிகட்டி அதை மிக்சி ஜாடியில் போடவும். அதில் கால் கப் ஊறவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்த வைத்த மாவில் நன்கு கனிந்த வாழைப்பழம் 2 சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன ஏலக்காய் பொடி, துருவின தேங்காய் அரை கப் சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும்.

மாவில் வடிகட்டியை பயன்படுத்தி, கரைத்து வைத்த வெல்லம் சேர்க்கவும். மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று அடிக்கவும்.

மாவை மிக்சி ஜாரில் இருந்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றவும். இந்த மாவை குறைந்தது 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெய்யில் அப்படியே விடவும். அடுப்பை மீடியம் தீயில் வைக்கவும். அப்பம் எண்ணெய் மேலே மிதந்து வரும் போது ரெண்டு பக்கமும் திருப்பி விட்டு வெந்த பிறகு எடுக்கவும்.

சுவையான கார்த்திகை அப்பம் ரெடி.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Do you know about the 5 benefits of carrots?

கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா?வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுங்க

முகப்பு / புகைப்பட தொகுப்பு / லைஃப்ஸ்டைல் / கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

Health Benefits Of Carrots | கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், கண் பார்வையை கூர்மையாக்குகிறது. அதுமட்டும் அல்ல, உடலில் உள்ள எலும்புகளையும் உறுதியாக்கிக்குறது.

01

 கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது.

Raw Carrot Benefits : கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது.

02

 கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

03

 100 கிராம் சிவப்பு கேரட்டில் 38 கிராம் கிலோகலோரி, 6.7 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 5 கிராம் நார்ச்சத்து, 7 mg வைட்டமின் சி, 451 mcg வைட்டமின் A மற்றும் 2706 mcg பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது.

100 கிராம் சிவப்பு கேரட்டில் 38 கிராம் கிலோகலோரி, 6.7 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 5 கிராம் நார்ச்சத்து, 7 mg வைட்டமின் சி, 451 mcg வைட்டமின் A மற்றும் 2706 mcg பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது.

 அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.

அதில், உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஏனென்றால், சர்க்கரை அளவை கேரட் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதில், உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.

 

 இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இதனால், எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும். இதனால், எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.

 

 கண்களுக்கு நல்லது : கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இந்த வைட்டமின் தவிர கண்களுக்கு கேரட் பல நன்மைகளை வழங்குகிறது.

கண்களுக்கு நல்லது : கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இந்த வைட்டமின் தவிர கண்களுக்கு கேரட் பல நன்மைகளை வழங்குகிறது.

 

 குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-யில் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது. இது தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

உடல் எடையைக் குறைக்கும் : குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-யில் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது. இது தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

 

 புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

புற்றுநோய் பாதிப்புகுறைவு : புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

 

 உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை, உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

சருமம் பளபளக்கும்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். கேரட்டில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய இரண்டு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இவை, உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

  • கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

    கண்களைக் கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கேரட், பார்ப்பதற்கு மட்டுமல்ல வெறுமனையாக சாப்பிடுவதற்கும் சிறந்தது. இது, சுவைக்கு மட்டும் அல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தது. இது உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண்பார்வையை பெறுவது வரை எக்கச்சக்கமான சத்துக்களை வழங்குகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

No matter how much cholesterol is squeezed Marutham Bark tea.. Must know the benefits..!

எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் பிழிந்து எடுக்கும் மருதம் பட்டை டீ.. நன்மைகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் பிழிந்து எடுக்கும் மருதம் பட்டை டீ.. நன்மைகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

மருத மரப்பட்டையில் செய்யப்படும் டீ-யில் இதய நலனைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் free radicals காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது

ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் மருதம் பட்டை க்கு அர்ஜூனா பட்டை என்ற பெயரும் உண்டு. இது நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மருதம் பட்டையில் தயாரிக்கப்படும் டீ-யை குடிப்பதால் நம் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இங்கே காண்போம்.

 

கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நலனை மேம்படுத்தும் டீ : உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை, குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க டயட் கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சிகள் வரை என எத்தனையோ முயற்சிகள் செய்து பார்த்தாகிவிட்டது. ஆனால் ஒன்றும் பிரயோஜனமில்லை என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது ஆயுர்வேத டீ ஒன்று. சர்வலோக நிவாரணியாக இருக்கும் இந்த டீயை குடிப்பதால், உங்கள் இதய நலன் இயற்கையாகவே மேம்படுகிறது.

 

 மருதம் பட்டை என்றால் என்ன? டெர்மினலியா அர்ஜூனா என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படும் மருத மரப்பட்டை பாரம்பரியமாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளது. முக்கியமாக இதய நலனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மருத மரப்பட்டையில் பயோ ஆக்டிவ் கலவைகளான ஃப்ளாவோனாய்ட்ஸ், டானின்ஸ் மற்றும் பிற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது. இதை தினசரி உணவில் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இதோ…​

மருதம் பட்டை என்றால் என்ன? டெர்மினலியா அர்ஜூனா என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படும் மருத மரப்பட்டை பாரம்பரியமாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளது. முக்கியமாக இதய நலனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மருத மரப்பட்டையில் பயோ ஆக்டிவ் கலவைகளான ஃப்ளாவோனாய்ட்ஸ், டானின்ஸ் மற்றும் பிற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது. இதை தினசரி உணவில் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இதோ…​

 

 பாதிப்பை தடுக்கிறது : மருத மரப்பட்டையில் செய்யப்படும் டீ-யில் இதய நலனைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் free radicals காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் இந்த மருதம் பட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.​

பாதிப்பை தடுக்கிறது : மருத மரப்பட்டையில் செய்யப்படும் டீ-யில் இதய நலனைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் free radicals காரணமாக ஏற்படும் பாதிப்பை தடுத்து இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் இந்த மருதம் பட்டை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.​

 

 கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு : மருதம் பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால், தமனியில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கவும் உடலில் நல்ல கொலட்ஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை இயற்கையாகவே குறைத்து லிப்பிட் ப்ரொஃபைலை (lipid profile) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு : மருதம் பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால், தமனியில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கவும் உடலில் நல்ல கொலட்ஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளை இயற்கையாகவே குறைத்து லிப்பிட் ப்ரொஃபைலை (lipid profile) ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

 

 ரத்த அழுத்த கட்டுப்பாடு : உங்கள் ரத்த அழுத்த அளவை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க மருத மரப்பட்டை உதவியாக இருக்கிறது. ரத்த நாளங்களை தளர்வாக்கவும், ரத்த ஓட்ட எதிர்ப்பை குறைக்கவும் மருதம் பட்டை உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.

ரத்த அழுத்த கட்டுப்பாடு : உங்கள் ரத்த அழுத்த அளவை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க மருத மரப்பட்டை உதவியாக இருக்கிறது. ரத்த நாளங்களை தளர்வாக்கவும், ரத்த ஓட்ட எதிர்ப்பை குறைக்கவும் மருதம் பட்டை உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது.

 

 இதய செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது : இதய செயல்பாட்டை மேம்படுத்துவதோடு இதயத்திலிருந்து வேறு உறுப்புகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் திறனை அதிகப்படுத்த உதவியாக இருக்கிறது மருதம் பட்டை. மேலும் கரோனரி தமனி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி ஆஞ்சினா (மார்பு வலி) போன்ற நிலைமை ஏற்படாமல் உதவுகிறது.

இதய செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது : இதய செயல்பாட்டை மேம்படுத்துவதோடு இதயத்திலிருந்து வேறு உறுப்புகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் திறனை அதிகப்படுத்த உதவியாக இருக்கிறது மருதம் பட்டை. மேலும் கரோனரி தமனி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி ஆஞ்சினா (மார்பு வலி) போன்ற நிலைமை ஏற்படாமல் உதவுகிறது.

 

 அழற்சி எதிர்ப்பு பண்புகள் : மருதம் பட்டையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய நலனிற்கு சிறந்த நன்மையைத் தருகிறது. இது உங்கள் இருதய அமைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் : மருதம் பட்டையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய நலனிற்கு சிறந்த நன்மையைத் தருகிறது. இது உங்கள் இருதய அமைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Do you suffer from hemorrhoids?

மூல நோயால அவதிப்படறீங்களா? தினம் கொஞ்சம் ரோஜா இதழ்களை இப்படி செஞ்சு சாப்பிடுங்க!!

​எப்படி சாப்பிட வேண்டும்?

சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் போது அவற்றை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் வளர்ந்த ரோஜாவில் நாம் ரசாயனங்கள் தெளிக்க மாட்டோம். இதுவே கடைகளில் வாங்கியதாக இருந்தால் சிறிது உப்பு தண்ணீரில் பத்து நிமிடம் வரை போட்டு வைத்து பின்பு நல்ல தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

நாட்டு ரோஜாக்களை (பனீர் ரோஜா) மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

காலையில் எழுந்ததும் பல துலக்கிலிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட வேண்டும்.

அதன்பிறகு, நன்கு சுத்தம் செய்த 15 - 20 ரோஜா இதழ்களை (ஒரு பூவின் இதழ்கள்) எடுத்து வாயில் போட்டு நன்கு மென்று அதன சாறு முழுவதும் உள்ளே போகும்படி சுவைத்து முழுமையாக சாப்பிட்டு விட வேண்டும். அதன் பிறகு சிறிது தண்ணீர் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம்.

இதை சாப்பிட்டு அரை மணி நேரம் வரை வேறு எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் இதன் முழு பயனும் உங்களுக்கு கிடைக்கும்.

​மூலநோய்க்கு அருமருந்து

மூல நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பலரும் பெரும் அவதியடைகிறார்கள். இந்த மூல நோய் உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் ரத்த மூலம், உள்மூலம் ஆகியவற்றை சரிசெய்வது மிகக் கடினமான விஷயம்.

அறுவை சிகிச்சை தான் இறுதியில் தீர்வு என்று சொல்லப்படுகிற மூல நோயின் தாக்கத்தைக் கூட இந்த ரோஜா இதழ்களை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியும்.

காலையில் சாப்பிடுவதை போல ஒரு டம்ளர் நீரில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களைச் சேர்த்து மாலை வேளையில் குடித்து வர மூல நோய் குணமாகத் தொடங்கும்.

​உடலை குளிர்ச்சியாக்கும்

உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கு வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான நிலையில் இருக்காது.. அதுமட்டுமின்றி சருமப் பிரச்சினை, தலைமுடி திர்தல் தொடங்கி அசிடிட்டி உள்ளிட்ட குடல் ஆரோக்கியத்தை பெரிதாக பாதிக்கும். அதனால் எப்போதும் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ரோஜா இதழ்கள் உதவி செய்யும். அதனால் உடல் சூட்டைத் தணிக்க நினைப்வர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுங்கள்.

​வயிற்றுப் போக்கு சரியாக

குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் என்ன சாப்பிட்டாலும் வயிறு வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். அவற்றை சரிசெய்து வயிற்றுப் போக்கை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் ரோஜா இதழ்களுக்கு உண்டு.

வயிற்றுப் போக்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படுகிறவர்கள் ரோஜா இதழ்களை வெந்நீரில். போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை டீ போல குடித்து வரலாம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Benefits of guava fruit

கொய்யா பழத்தின் நன்மைகள்

கொய்யா பழங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின்-ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கொய்யாவில் குடலை சுத்தம் செய்யும் பெக்டின் உள்ளது. பசியை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்கும். தோல் பராமரிப்புக்கு அவசியமான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Acidity Vs Heart Attack... What is the difference between the two..?

அசிடிட்டி Vs மாரடைப்பு... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..? அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையாக கருதப்படுகிறது. ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு சிலர் அசிடிட்டி அல்லது கேஸ்ட்ரிக் பிரச்சனையாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டு மருத்துவரின் உதவியை நாடாமல், கை வைத்தியம் செய்து, மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.

இது பல்வேறு பிற காரணிகளுடன் இணைந்து ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் நபர்கள் இதயம் சார்ந்த நோய்கள் காரணமாக இறந்து போகின்றனர். நெஞ்சில் ஒருவித எரிச்சல் உணர்வை அனுபவிக்கும் பொழுது உடனடியாக நாம் கடைசியாக சாப்பிட்ட உணவுடன் அதனை தொடர்புப்படுத்தி பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் அதற்கு வேறு காரணமாக இருந்தால் என்ன செய்வது?

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்கும் அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் : அசிடிட்டி என்பது நமது நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஹார்ட் அட்டாக் சமயத்திலும் இதே போன்ற உணர்வு ஏற்படும். இந்த இரண்டு நோய்களுக்கான அறிகுறிகளில் ஒன்று தவிர்க்க கூடியதாகவும், மற்றொன்று மிகவும் மோசமானதாகவும் இருப்பதால் இவை இரண்டிற்கான வேறுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. அசிடிட்டியை பொருத்தவரை நெஞ்சு பகுதியில் ஏற்படுகின்ற அசௌகரியம் குறிப்பாக மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அதன் பிறகு வாயில் புளிப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான கசப்பு சுவை உண்டாகும். மேலும் அசிடிட்டி பிரச்சினையில் இறுதியாக நம் வயிற்றில் இருக்கக்கூடிய உணவில் சிறிதளவு மீண்டும் வாய்க்கு வந்து சேரும்.

இதுவே ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை நெஞ்சை யாரோ பிழிவது போல ஒரு வித வலி அல்லது நெஞ்சு பகுதியில் அதிக அழுத்தத்துடன் கூடிய வலி உண்டாகும். நெஞ்சு பகுதியில் தொடங்கிய வலியானது கழுத்து, தாடை மற்றும் முதுகு போன்றவற்றிற்கு பரவுவது ஹார்ட் அட்டாக்கின் முக்கியமான ஒரு அறிகுறி. வயிறு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குளிர்ந்த வியர்வை மற்றும் மயக்கம் போன்றவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகள். இதயத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காததால் நெஞ்சில் ஒருவித இறுக்கம் மற்றும் வலி ஏற்படுவது ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படக்கூடிய நெஞ்சு வலி பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படலாம்.

ஹார்ட் அட்டாக்கை போல தோன்றக்கூடிய பிற நெஞ்சு அசௌகரியங்கள் : அசிடிட்டி தவிர உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு வித தசை சுளுக்கு காரணமாகவும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்படலாம். பித்தப்பையில் நோய்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு ஏற்படும் வலி ஹார்ட் அட்டாக் போன்ற உணர்வை கொடுக்கலாம்

எப்பொழுது விரைவாக செயல்பட வேண்டும்? : உடற்பயிற்சி அல்லது மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு உங்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நெஞ்சில் தொடங்கிய வலியானது கைகள், வாய் மற்றும் முதுகு பகுதிக்கு நகரும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு மருத்துவ உதவி தேவை. இதைத்தவிர உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.

நெஞ்சு வலி ஏற்படும் பொழுது இது அசிடிட்டியாக தான் இருக்கும் என்று நீங்களாக ஒரு முடிவுக்கு வராமல் மருத்துவரை அணுகி ECG மற்றும் கார்டியோ கன்சல்டேஷன் பெறுவது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகிய இரண்டிற்குமான அறிகுறிகள் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. இவற்றை முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதனை தெளிவுப்படுத்திக்கொள்ள மருத்துவரை அணுகுவதில் தப்பு ஏதும் கிடையாது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Does your heart beat fast all of a sudden?

அடிக்கடி திடீரென உங்கள் இதயம் வேகமாக துடிக்கிறதா..?

பொதுவாகவே உடல் ஆற்றல் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இரும்பு சத்து மிகவும் அடிப்படையான தேவை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். சரி... உங்களுக்கு இரும்புச் சத்து போதுமான அளவில் இருக்கிறதா..? இதோ கண்டறிய சில அறிகுறிகள்.

இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தால் பெண்களின் ஹீமோகுளோபின் அளவு எப்போதும் குறைவாகவே காட்டுகிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே உடல் ஆற்றல் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இரும்பு சத்து மிகவும் அடிப்படையான தேவை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். சரி... உங்களுக்கு இரும்புச் சத்து போதுமான அளவில் இருக்கிறதா..? இதோ கண்டறிய சில அறிகுறிகள்.

உடல் சோர்வு : இது மிகவும் பொதுவான அறிகுறியாகும். உடல் ஆற்றல் குறைந்து எப்போதும் சோர்வாகவும், சோம்பேறியாகவும் இருக்கும். எந்தவேலையையும் செய்யத் தோன்றாமல் சோர்வுடனே இருப்பீர்கள். நீங்கள் செய்ய வேண்டும் என்று முற்பட்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. இப்படியான அறிகுறிகள் இரும்புச் சத்துக் குறைபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.

வெளிர் சருமம் : உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கிறது அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றாலும் இரும்புச் சத்துக் குறைபாடேக் காரணம். இப்படி வாயின் உள்பக்கம் இரத்த ஓட்டம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருத்தல், உதடு, விரல் நகங்கள் நன்கு வெள்ளை நிறத்தில் மாறுகிறதெனில் இரும்புச் சத்துக் குறைபாடே காரணம்.

மூச்சுத் திணறல் : இதுவரை இல்லாதது போல் படிகட்டு ஏறினால் மூச்சு வாங்குதல், நடந்தால் மூச்சு வாங்குதல் என கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வேலை செய்தாலும் மூச்சு வாங்குகிறது எனில் சாதாரணமாக இருக்காதீர்கள். அதுவும் இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறிதான்.

இதயத் துடிப்பு அதிகரித்தல் : வழக்கத்திற்கு மாறாக திடீரென இதயத் துடிப்பு வேகமாகிறது என்றால் அதற்கு இரும்புச் சத்துக் குறைபாடுதான் காரணம். ஏனெனில் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் இதயம் ஆக்ஸிஜனை வெளியிட கூடுதலாக வேலை செய்யும். எனவே இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

கால் மரத்துபோதல் : ஒரு இடத்தில் நிலையாக அமர்ந்திருத்தால் உடனே கால் மரத்து போகும். கால்கள் ஷாக் அடித்ததைப் போல் உணர்வீர்கள். அப்படி நீங்கள் அடிக்கடி உணர்கிறீர்கள் எனில் அது சாதாரண விஷயமல்ல. இரும்புச் சத்து போதுமான அளவு இல்லை என்பதே காரணம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 30 )   NEXT |  LAST