Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

Three boys who hacked and burned the teenager who sexually assaulted him!

பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை வெட்டிக்கொலை செய்து எரித்த மூன்று சிறுவர்கள்! டெல்லியில் மக்கள் அதிர்ச்சி

தென்கிழக்கு டெல்லி பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் உடல் நேற்று கிடந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், ஆசாத் அகமது(25) என்பது தெரிய வந்தது. அவர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக 16 வயது சிறுவனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்ட சிறுவனை, ஆசாத் அகமது பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் சிறுவன் கூறினார். இதையடுத்து அவரை கொலை செய்ய மூன்று சிறுவர்களும் முடிவு செய்தனர்.

இதன்படி ஆள் அரவமற்ற இடத்திற்கு ஆசாத்தை வரவழைத்து 16 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதன் பின் அவரது உடலை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அவரது இரண்டு நண்பர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் 17 வயதாகிறது. 

பாலியல் வன்கொடுமை செய்தவரை நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Young girl chained and burnt to death.. birthday surprise

இளம்பெண் சங்கிலியால் கட்டி எரித்து கொலை.. பிறந்தநாள் சர்ப்ரைஸ் என வெறிசெயல்

செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி அடுத்த பொன்மார் பகுதியில் பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்த்தபோது பெண்ணின் கை, கால்களை சங்கிலியால் கட்டி தீ வைத்து எரித்து கொலை செய்திருப்பது தெரிந்தது.

போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடல் அருகே கிடந்த செல்போனை எடுத்த போலீசார் அதில் இருந்த ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்க, கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் தெரியவந்தன.

அதன்படி, கொலையான இளம்பெண் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த 26 வயதான நந்தினி என்பதும், மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், நந்தினியை அவரது நெருங்கிய நண்பர் வெற்றிமாறன் கொலை செய்தது தெரிய வந்ததையடுத்து வெற்றிமாறன் என்ற திருநம்பியை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் ஒரு தலை காதல் காரணமாக நந்தினியை வெற்றிமாறன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. நந்தினியும், வெற்றிமாறனும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்துள்ளனர். நேற்று நந்தினியின் பிறந்தநாள் என்பதால் வெற்றிமாறனும், நந்தினியும் காலையில் கோயிலுக்கும், பிற்பகலில் ஆதரவற்றோர் காப்பகத்துக்கும் சென்று மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்ப அதிர்ச்சி அளிப்பதாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு நந்தினியை அழைத்துச்சென்றுள்ளார். வெற்றிமாறன் மீதிருந்த நம்பிக்கையால் நந்தினியும் கேள்வி கேட்காமல் சென்று இருக்கிறார். அங்கு நந்தினியை துணியால் கண்ணை கட்டி, பின்னர் கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என்று நந்தினி கேட்க உனக்கு சர்ப்ரைஸ் என்று சொல்லி நந்தினியை நம்ப வைத்துள்ளார்.

அதன்பின் நந்தினியின் கை, கால், கழுத்து என பல இடங்களில் பிளேடால் அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் நந்தினி கதறியதும் வாயில் துணியை வைத்து அடைத்து, அவரது தலையில் கல்லால் ஓங்கி அடிக்க அவர் நிலை குலைந்து கீழே சரிந்து இருக்கிறார். பின்னர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து நந்தினி மீது ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநம்பியாக மாறிய வெற்றிமாறன் நந்தினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.  ஆனால் நந்தினி வேறொரு நபரை காதலிப்பதை அறிந்து பிறந்தநாள் அன்றே வெற்றிமாறன் தனது பள்ளி பருவ தோழியை இரக்கமின்றி கொலை செய்திருக்கிறார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Breaking - IT

Breaking - ஐ.டி. பெண் ஊழியர் காதலுக்கு மறுத்ததால் திட்டம் போட்டு கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூர கொலை

சென்னையில், ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலன் கைது

காதலுக்கு மறுத்ததால் திட்டம் போட்டு கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டதாக தகவல்

பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் காதலன்

மதுரையை சேர்ந்த 28 வயது இளம்பெண் நந்தினி கேளம்பாக்கம் அருகே சங்கிலியால் கட்டி கை, கால்களை அறுத்து எரித்து கொலை

நேற்று பெண்ணின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி, கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுவிட்டு இரவில் கொலை

கைதான வெற்றியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

The science teacher who abused the students in the study hall of the school was arrested!

மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த விஞ்ஞான ஆசிரியர் கைது!

நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வாட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிகில்கஸ்கடபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Mother and brother who lived with the corpse of a rotten woman.

அழுகிய பெண்ணின் சடலத்துடன் வாழ்ந்த தாய் சகோதரன்.! பகீர் சம்பவம்.!

ஹைதராபாத் நகரில் இறந்த பெண்ணின் சடலத்துடன் தாயும் சகோதரனும் 5 நாட்கள் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள குடியிருப்பின் ஒரு வீட்டில் ஆள் நடமாட்டமில்லாமல் இருந்ததோடு அழுகிய வாடையும் அடித்ததால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது வீட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணுடன் அவரது தாயும் சகோதரரும் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் இறந்த பெண் நோயின் காரணமாக 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்தப் பெண்ணின் தாயும் சகோதரரும் அந்தப் பெண் இறந்ததாக தங்களுக்கு தெரியவில்லை எனக் கூறியிருக்கின்றனர். இறந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரருக்கு மனநிலை சரியில்லாமல் இருக்கலாம் என காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Govt school teacher caught for sexually harassing female students by showing pornographic images

மாணவிகளிடம் ஆபாச படங்கள் காண்பித்து, பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிக் கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 112 மாணவிகளும், 95 மாணவர்களும் என 207 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் என்பவர் பணியாற்றி வருகிறார். உடல் பருமனாக, மிடுக்கான தோற்றமுடைய மாணவிகளை குறு குறுவென பார்ப்பாராம்.

இடைவேளை நேரத்திலும், மதிய உணவு நேரத்திலும் மாணவிகளை அழைத்து ஆபாச படங்களை காண்பிப்பாராம். இதனை தங்களது பெற்றோரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் மாணவிகள் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் கொடூரமான நாட்களை கடந்து சென்றுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பேச்சு போட்டிக்கு தனது பள்ளியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை அழைத்து சென்றுள்ளார் மகேஸ்வரன். அதில் ஒரு மாணவி மதியம் சாப்பாடு எடுத்து வந்த நிலையில், இன்னொரு மாணவி சாப்பாடு எடுத்து வரவில்லை.

இதனை பயன்படுத்தி கொண்ட மகேஸ்வரன், ”பக்கத்தில் எனது நண்பர் பக்தாசலம் ஆசிரியர் வீடு இருக்கிறது. அங்கே போய் சாப்பிட்டுவிட்டு வரலாம்” என்று இரண்டு மாணவிகளையும் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மாணவிகளுக்கு செல்போனில் இருந்த ஆபாச படத்தை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அடுத்தநாள் பள்ளிக்கு சென்று அங்கு வேறு சில மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கடைசியாக கம்யூனிஸ்ட் சித்தாந்தம் அறிந்தவரின் மகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார் மகேஸ்வரன். கோபமடைந்த அந்த மாணவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ளார்.

பயந்துபோன மகேஷ்வரன் தான் தொல்லை கொடுத்த ஒவ்வொரு மாணவியின் பெயர்களை சொல்லி, ”அவர்கள் எதுவும் கேட்கவில்லை, உனக்கு என்ன திமிரா? இந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் உன்னை பெயிலாக்கிவிடுவேன், நீ ஒருவனை காதலிப்பதாக உன்னுடைய பெற்றோர்களிடம் சொல்லி அசிங்கப்படுத்திவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவியின் அம்மா பெயரில் சத்தியமும் வாங்கியுள்ளார்.

இதனால் தனது பெற்றோரிடம் சொல்வதற்கு பயந்த அந்த மாணவி, பள்ளியில் ஆசிரியர் மகேஸ்வரனால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து டியூஷன் டீச்சரிடம் அழுதபடி கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ந்து போன அந்த டியூஷன் டீச்சர் அந்த மாணவிக்கு ஆறுதல் கூறியதோடு, உடனடியாக அவரது பெற்றோரிடம் மகேஸ்வரன் பள்ளி மாணவிகளுக்கு இழைத்து வரும் பாலியல் கொடுமைகளை கூறியுள்ளார்.

இதனால் கொதித்து போன அந்த மாணவியின் கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். பின்னர் பிஞ்சு மாணவிகளிடம் அத்துமீறிய தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனையும் நையப்புடைத்துள்ளனர்.

தொடர்ந்து கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி புகார் கொடுத்ததை அடுத்து, தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ”மகேஸ்வரன் மிக மோசமானவன். அவனையெல்லாம் தூக்கில் போடணும். அந்த அளவுக்கு பிள்ளைகளை கொடுமை செய்துள்ளான், ஐந்து மாணவிகளை தொடர்ந்து பாலியல் தொல்லை செய்துள்ளான்.

கடைசியாக பாதிக்கப்பட்ட மாணவியும் தைரியமாக சொல்லவில்லை என்றால் அந்த தமிழ் வாத்தி தொடர்ந்து பல மாணவிகளை நாசம் செய்திருப்பான்” என்று கூறியுள்ளனர்.

”இந்த சமூகத்தின் பேரழிவு. இது வெளியில் தெரிந்துள்ளது. இதுபோன்ற பல கல்வி நிலையங்களில் நடக்கும் கொடுமைகள் வெளியில் வராமல் நிறைய உள்ளன” என்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

A 16-year-old daughter who tried to save her father was hacked to death

தந்தையை காப்பாற்ற முயன்ற 16 வயது மகள் வெட்டிக் கொலை

தந்தையை காப்பாற்ற முயன்ற போது மகளை ஒரு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கல்யாண்பூர் அடுத்த ஷம்புச்சக் பகுதியை சேர்ந்த ராம்தர்ஷன் கிரி என்பவர், தனது கரும்பு தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து வயல்களில் கரும்புகளை வெட்டி கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கரும்பு தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் ராம்தர்ஷன் கிரியை திடீரென சரமாரியாக தாக்கினர். இதற்கிடையில், ராம்தர்ஷனின் 16 வயது மகளான குஷ்பு குமாரி தனது தந்தையை காப்பாற்றுவதற்காக அந்த கும்பலிடம் போராடினார். அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், அந்த சிறுமியை அரிவாளால் வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமி அடுத்த சில நிமிடங்களில் கரும்பு தோட்டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் திரண்டனர். மக்களைக் கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் டிஎஸ்பி சத்யேந்திர குமார் சிங் கூறுகையில், ‘இரு தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

சம்பவ நாளில் சிறுமி குஷ்பு குமாரியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சிறுமி தனது தந்தையை காப்பாற்ற முயன்ற போது கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் புகார் வந்தவுடன் மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

College student commits suicide by jumping from 11th floor after being caught cheating

காப்பியடித்து மாட்டிக் கொண்டதால் 11வது மாடியில் இருந்து கல்லூரி மாணவர் குதித்து தற்கொலை

கல்லூரி செமஸ்டர் தேர்வில் காப்பியடித்து மாட்டிக் கொண்டதால், மன அழுத்தத்தில் கல்லூரியின் 11வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவன் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மகன் கோகுல்ராம் (19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் நடைப்பெற்ற சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வில் கோகுல்ராம் கலந்து கொண்டார். இந்த தேர்வு, கல்லூரியின் 5வது மாடியில் நடத்தப்பட்டது.

அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவரைப் பார்த்து கோகுல்ராம், காப்பியடித்து தேர்வு எழுதிய நிலையில், அந்த வகுப்பறையில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த பெண் பேராசிரியர் கோகுல்ராமை இது குறித்து கண்டித்துள்ளார். பின்னர், கோகுல்ராமின் தேர்வு விடைத்தாளை வாங்கி கொண்டு, தேர்வு அறையை விட்டு வெளியே அனுப்பியதாகவும், தனது பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வருமாறும் கூறியதாக தெரிகிறது.

காப்பியடித்து மாட்டிக் கொண்ட அவமானத்தாலும், பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்கிற பயத்தினாலும் மனமுடைந்த கோகுல்ராம், கல்லூரியின் 11வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவர் கோகுல் ராமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Hanged from a tree on Perumal Kovilpatti road near Andipatti...

ஆண்டிபட்டி அருகே பெருமாள் கோவில்பட்டி சாலையில் மரத்தில் தூக்குப்போட்டு அடையாளம் தெரியாத 45 வயது ஆண் தற்கொலை.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 13 )   NEXT |  LAST