ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
ராமர் கோயில் திறப்பு விழாவில் விவசாயிகள், தலித் மக்களை பார்க்க முடிந்ததா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உபி-யில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல், பிரதமர் தலைமையில் ராமர் கோயில் திறப்பு நடைபெற்றது, அதில் கலந்துகொள்ள அமிதாப், ஐஸ்வர்யா ராய், அம்பானி, அதானி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாட்டுக்கு உணவு தரும் தொழிலாளியை தவிர, அனைவருக்கும் அங்கு வந்தனர் என்றார்.
யாரையும் பா.ஜ.க கைது செய்யும்!
"பா.ஜ.க.விற்கு கிடைத்திருக்கும் ஒரு புதிய ஆயுதம் ED. இதுவரை, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பிறகே சிறைக்கு அனுப்பப்படும் நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது, யாரை சிறைக்கு அனுப்புவது என்று பா.ஜ.கதான் முடிவு செய்கிறது. அப்படித்தான் வழக்கே இன்னும் தொடங்காத நிலையில் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை யாரையும் சிறையில் அடைத்து அரசை கவிழ்க்கவும் பா.ஜ.க முயற்சிக்கும்.” டெல்லியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!