Advertisement

Constipation, blood pressure, cholesterol should be solved all problems?

மலச்சிக்கல், ரத்த அழுத்தம், கொலஸடிரால்னு எல்லா பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கணுமா?

​தெளிவாக கண் பார்வைக்கு​

கருப்பு உலர் திராட்சை ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளைக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் போன், கம்ப்யூட்டரில் நேரத்தை செலவழிப்பவர்களுக்கு இயற்கையாகவே கண் பார்வையில் பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும் கண் வறட்சி ஏற்படும். சில குழந்தைகள் சிறுவயதிலேயே கண்ணுக்கு கண்ணாடி போடுவார்கள். இவர்கள் தொடர்ச்சியாக கருப்பு உலர் திராட்சையை எடுத்துக் கொண்டு வரும்போது கண் பார்வை தெளிவாகும்.

ரத்த அழுத்தம் சீராகும்​

உயர் ரத்த அழுத்தமாக இருந்தாலும் சரி, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்தாலும் சரி, இரண்டையும் சீர்செய்யும் ஆற்றல் உலர் திராட்சைக்கு உண்டு.

இதிலுள்ள பாலிபினைல்கள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவி செய்யும்.

​வறட்டு இருமல் குறைய​

பருவ காலங்களில் உண்டாகும் இருமல், வறட்டு இருமல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணியாக கருப்பு உலர் திராட்சை இருக்கும்.

வறட்டு இருமல் உண்டாகும் நேரங்களில் 4 உலர் திராட்சையை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட வறட்டு இருமல் நீங்கும்.

​உடல் எடை குறைய​

தினமும் 6 கருப்பு உலர் திராட்சை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அதை சாப்பிட்டு வர, உங்களுடைய உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

உடலின் மெட்டபாலிசம் சீராகி, வேகமாகவும் ஆரோக்கியமாகவும் உடல் எடை குறைய உதவி செய்யும்.

​வாய் ஆரோக்கியம்​

சிலருக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலும் வாயில் கெட்ட துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கும். இதுபோன்று வாய் துர்நாற்றப் பிரச்சினை உள்ளவர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு கருப்பு திராட்சை ஊறவைத்த நீரைக் குடித்து வரலாம்.

அதோடு துர்நாற்றம் வீசுவது போல உணரும் சமயத்தில் இந்த கருப்பு திராட்சையை வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

​மலச்சிக்கலை தவிர்க்க​

குடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்தால் தான் குடல் இயக்கம் சீராக இருக்கும். மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினை உண்டாகாமல் இருக்கும்.

ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்சினையைச் சரிசெய்து மலச்சிக்கல் வராம தடுக்க கருப்பு திராட்சை உதவி செய்யும் . தினமும் காலை வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு , அந்த நீரைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் கட்டுக்குள் இருக்கும்.

​​அனீமியாவை சரிசெய்யும்​

கருப்பு திராட்சையில் இரும்புச் சத்து மிக அதிகம். இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

பெண்கள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக அனீமியாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தவிர்க்க தினமும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த கருப்பு திராட்சை 10 என்கிற அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

​​வெர்டிகோவுக்கு தீர்வு தரும்​

சிலருக்கு வெர்டிகோ பிரச்சினை இருக்கும். திடீரென தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை சரிசெய்ய கருப்பு திராட்சை மிகச்சிறந்த வீட்டு வைத்தியம் என்றே சொல்லலாம்.

தொடர்ச்சியாக கருப்பு திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த அழுத்தம் சீரடைவதோடு வெர்டிகோ பிரச்சினை படிப்படியாகக் குறைவதை உணர்வீர்கள்.

​​சரும பொலிவு, ஆரோக்கியமான தலைமுடி​

கருப்பு திராட்சையில் நிறைய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை செல்களில் ஏற்படும் சேதத்தை குறைத்து சருமத்தைப் பொலிவாக மாற்றும் தன்மை கொண்டிருக்கிறது.

முகத்தில் இருக்கிற சுருககங்கள், நுண்ணிய கோடுகள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும். வைட்டமின் ஏ மற்றும் ஈ, சி ஆகியவை தலைமுடி மற்றும் சருமத்துக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும்.

​பெண்கள் ஆரோக்கியத்துக்கு​

பெண்கள் ஆரோக்கியத்தில் கருப்பு திராட்சைக்கு மிக முக்கியப் பங்குண்டு. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும். குறிப்பாக, ஒவ்வொரு மாதவிடாயின் போது ரத்தக் கழிவுகளை முறையாக வெளியேற்றி. கருப்பையை சுத்தம் செய்யும் ஆற்றல் இந்த கருப்பு திராட்சைக்கு உண்டு.

இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பெரும்பாலான பெண்களுக்கு உண்டாகும் அனீமியாவை சரிசெய்ய உதவுகிறது. மேலும வைட்டமின் ஏ, சி, ஈ ஆகியவை உள்ளன.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Panguni festival starts with flag hoisting at Oppiliyappan temple

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் அருகே அமைந்துள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15332 )   NEXT |  LAST