கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான கீழ்கண்ட வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய காத்திருக்க வைப்பதை தவிர்க்க கூடுதல் தகன மேடைகளை உருவாக்கலாம்.
2. இடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா நோயாளிகளின் உடல்களை கையாள விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.
3. சடலங்களை தொடாமல் இறுதிச்சடங்களை நடத்த அனுமதிக்கலாம் என்றும், மத நூல்களை வாசிக்கவும், புனித நீரை சடலம் மீதும் தெளிக்கவும் அனுமதிக்கலாம்.
4. இறந்தவர்களின் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்ய இயலாத போது, மத அம்சங்களை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் அவற்றை மேற்கொள்ளலாம்.
5.மின் மயானங்களை அதிகரிக்க வேண்டும்.
6. இறந்தவர்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் மொத்தமாக உடல்களை எரிக்க கூடாது.
7.இடுகாடு, மின்மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
8. இறந்தவர்களின் அடையாளம் மற்றும் தகவல்களை சேகரிக்க வேண்டும்.
9.சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.
10. இடுகாடு, மின் மயானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
11. ஊடகங்களில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை நேரடியாக காட்டக்கூடாது என 11 நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.