சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நடைபெற்றது.
அதிகளவு உயிர்பலி வாங்கும் கொரோனா சூழ்நிலையில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களை தேர்வு எழுத சொல்லி கட்டாயப் படுத்தக்கூடாது.
தேர்வுகளில் மாணவ மாணவிகளில் யாராவது ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியான ஒரு முடிவு என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது இந்நிலையில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.