இதயக்குழல் நோய்களை எவ்வாறு தடுப்பது? மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்! முதல் உதவி எவ்வாறு செய்வது!

நடத்தை ஆபத்துக் காரணிகளை சரிசெய்வதன் மூலம் பல இதயக்குழல் நோய்களைத் தடுக்க முடியும்.

ஆரோக்கிய உணவை உண்ணவும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்பற்ற இறைச்சிகள், மீன் போன்ற உணவுகளால் உங்கள் தினசரி உணவைச் செறிவூட்டுங்கள். விலங்கு கொழுப்பு, சீனி மற்றும் உப்பைக் கட்டுப்படுத்துங்கள்.

புகைக்காதீர். புகைப்பவர் அருகில் நிற்காதீர்.

தொடர்ந்து உடல் பயிற்சி செய்யவும். இதய துடிப்பு விகிதத்தையும் சுவாசத்தையும் அதிகரிக்க தினமும் 30 நிமிடம் நடக்கவும். உடல் செயல்பாடு நோய் ஆபத்தைக் குறைக்கும்.

மிகை இரத்த அழுத்தம்: மாரடைப்பை உண்டாக்கும்
இரத்த சர்க்கரை அளவு: நீரிழிவு இருந்தால்
இரத்தக் கொலஸ்ட்ரால்: மிகை கொலஸ்ட்ரால் மாரடைப்பை உண்டாக்கும்
மருந்துகளைக் கவனமாக உட்கொள்ளவும்: மருத்துவர் ஆலோசனைப்படி தொடர்ந்து உட்கொள்ளவும்.

உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்: உங்கள் நலத்துக்காகவும் உங்கள் குடும்ப நலத்துக்காகவும் நீங்கள் செய்வது குறித்துப் பெருமைப்படவும்.

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி அறியவும்:

சில நிமிடங்கள் நீடிக்கும் நெஞ்சின் நடுவில் மெல்லிய வலி அல்லது அசௌகரியம்
ஒரு அல்லது இரு புயங்கள், முதுகு, கழுத்து, தாடை அல்லது வயிற்றில் வலி அல்லது அசௌகரியம்
மூச்சடைப்பு , குளிர் வியர்வை, குமட்டல், கிறக்கம்

முதல் உதவி எவ்வாறு செய்வது!

நோயாளியை உட்கார வைக்கவும் அல்லது அவருக்கு மிகவும் ஏற்ற நிலையில் வைக்கவும்
இறுகிய ஆடைகளைத் தளர்த்தவும்
நைட்ரோகிளிசரின் போன்ற இதய பிரச்சினைகளுக்கான நெஞ்சுவலி மருந்து உட்கொண்டு வந்தால் அதை உட்கொள்ள உதவவும்.
ஓய்வில் அல்லது நைட்ரோ கிளிசரின் உட்கொண்டு 3 நிமிடங்களில் வலி நிற்கவில்லை என்றால் அவசர மருத்துவ உதவியை நாடவும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சிரோடைப் II என்ற வகை டெங்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது - ஒன்றிய அரசு எச்சரிக்கை

ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், கேரளா, உத்தர பிரதேசம், மராட்டியம், ஒடிச, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சிரோடைப் II டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் 10 ஆம் தேதிகளில் ஒன்றிய சுகாதாரத்துறை இது குறித்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல், காய்ச்சல் உதவி முகாம்கள் நடத்துதல், போதுமான அளவில் பரிசோதனைக் கருவிகள், மருந்துகளை இருப்புவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடா்பு அறிதல், ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதிப்படுத்துதல் தொடா்பான பணிகளுக்காக குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது

வீடியோ பார்க்க >>

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள்! பெரும் அச்சத்தில் மக்கள்

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மக்கள் அச்சத்தில் உள்ளன. டெங்கு பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கேரளாவில் 60க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பரவிய நிலையில் மகாராஷ்ட்ராவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் பரவி உள்ளது. புனே நகரில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பில் இருந்து அந்த பெண் குணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். எனினும், ஜிகா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.

எனினும், நிலைமையை கண்காணிக்கவும், ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகளுக்கு உதவவும் மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதார குழுவை அனுப்பி வைத்துள்ளது

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
ஏசியால் இந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது?

ஏசியை பயன் படுத்துபவர்கள் அதை முறையாக பராமரித்து சுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் ஏசியில் உள்ள பாக்டீரியா போன்றவைகளால் புற்றுநோய், இதய நோய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அதுவும் இந்த கொரோனா காலத்தில் ஏசியை பராமரிப்பதில் மேலும் அதிக கவனம் தேவை, ஏசியை குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சூடான நீருடன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது ஏற்படும் நன்மைகள்

சூடான நீருடன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அளவில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசுக்களின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அளிக்கிறது இதனால் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகும். தொண்டை புண் இருக்கும் பொழுது தினமும் 2 அல்லது 3 முறை தொடர்ந்து செய்வதால் தொண்டை புண் குணமாகும்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
யோகா தின வாழ்த்துக்கள்

யோகா தின வாழ்த்துக்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கத்தரிக்காய்களின் நன்மைகள்

கத்தரிக்காய் அதிக நார்ச்சத்துள்ள, குறைந்த கலோரி கொண்ட உணவாகும், இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது.

இதய நோய்க்கான அபாயத்தைக் குறைப்பதில் இருந்து, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, புற்றுநோய் வராமல் பாதுகாக்கும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவுவது வரை கத்தரிக்காய்கள் பல விதத்தில் உடலுக்கு நன்மைகள் தருகிறது.

உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள்

இளநீர்: -
இளநீர் நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டிய ஒன்றாகும். இதில் பொட்டாசியம், குளோரைடுகள் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. மேலும் இது செரிமானமாக கூடிய நார்ச்சத்துகள், கால்சியம், மெக்கனீசு, விட்டமின் சி போன்றவற்றை கொண்டுள்ளது. இது உங்களது உடல் நீரில்லாமல் வறட்சியடைவதை தடுக்கிறது.

மோர்: -
மோர் கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்த ஒரு நீர் ஆகாரமாகும். இது உங்களது கால்சியம் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக வெயில் காலத்தின் கடுமையில் இருந்து விடுபட கர்பிணி பெண்கள் இந்த மோரை பருக வேண்டியது அவசியமாகும்.

தண்ணீர்: -
கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது. மேலும் இது கர்ப்பமாக இருக்கும் போது உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. அதனால் குறைந்தது ட்டு டம்ளர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

ஆப்பிள் ஜூஸ்: -
ஆப்பிள் ஜூஸ் நல்ல சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆகும். ஆப்பிள் உங்களது உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள்.

எலுமிச்சை சாறு: -
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எலுமிச்சை சாறு முக்கியமாக பரிந்துரை செய்யப்படுகிறது. எலுமிச்சை சாறில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த எலுமிச்சை சாறு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் வரும் காய்ச்சலை போக்க உதவுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
வாட்ஸ்அப் மூலம் வீடு தேடி வரும் மருந்துகள் - மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம்

கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்தில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதாவது மாநிலம் முழுவதும் 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து வாட்ஸ்அப் மூலம் மருந்து விநியோகிக்கும் சேவையை துவங்கியுள்ளனர். குறிப்பாக மருந்து தேவை, மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவையை, முகவரியுடன் கூறினால், இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 29 of 30 )   NEXT |  LAST