சமூக வலைத்தளங்கள் காரணமாக 36 விழுக்காடு இந்தியர்கள் தூக்கமின்மையால் தவிப்பதாகவும், இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அரசு மகப்பேறு மருத்துவர் ஜெய செல்வி கூறும்போது, நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாக ஆழ்ந்த தூக்கம் கருதப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் 59 சதவீத இந்தியர்கள் சராசரி உறங்கும் நேரமான பதினோரு மணியைத் தாண்டியும் விழித்திருப்பதாகத் தெரிவித்தார்.
தூக்கமின்மை காரணமாக பெண்களுக்கு கருமுட்டையில் நீர்கட்டி நோய் ஏற்படுவதாகக் குறிப்பிட்ட மருத்துவர், இதனைப் பயன்படுத்தி கருத்தரிப்பு மையங்கள் ஆங்காங்கே முளைத்து வருவதாகத் தெரிவித்தார். இது ஆபத்தான ஒன்று என எச்சரித்த மருத்துவர் ஜெயசெல்வி, தூங்கும் நேரத்தில் டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், மெல்லிசை, வாசிப்பு போன்றவை நல்ல தூக்கத்தைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
WebMD படி, வைட்டமின் B12 இன் குறைபாடு நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கிறது....
விரிவாக படிக்க >>கல்லீரலை டீடாக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் கூடுதல் முயற்சி ஏதும் செய்யத் தேவையில்லை, மாறாக கல்லீரல் வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாலே ஆரோக்கியமான கல்லீரலை நம்மால் பெற முடியும்....
விரிவாக படிக்க >>இன்றைய காலகட்டங்களில் பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் 10 வயது சிறியவர்களுக்கும் மாரடைப்பு வருவது சகஜமாக உள்ளது இந்நிலையில் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது வைட்டமின் டி சப்ளிமெண்ட் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் என்று.
வைட்டமின் டி இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து புதிதல்ல. பழைய கண்காணிப்பு ஆய்வுகள், இரத்தத்தில் அதிக வைட்டமின் டி அளவைக் கொண்டவர்களுக்கு இருதய நோய் குறைந்த விகிதங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது