நடிகரும் கவிஞருமான அமரசிகாமணி மாரடைப்பு காரணமாக இன்று காலை இயற்கை எய்தியுள்ளார். தமிழ்சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் அமரசிகாமணி. நடிகர் மட்டுமல்லாமல் இவர் கவிஞராகவும் அறியப்படுபவர். அவருக்கு வயது 71. மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இலலத்தில் அவரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடக்கும் என சொல்லப்படுகிறது
திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கார்த்திகா, முதுநிலை பயற்சி மருத்துவர். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கு சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டிலேயே வைத்து சீமந்தம் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின்னர் கர்ப்பிணியான மருத்துவர் கார்த்திகாவிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திருவாண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்றவர், தொற்றின் தீவிரத்தால் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆனால் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதால், வானகரம் அப்போல்லோ மருத்துவனையில் இருந்து கடந்த 19-ம் தேதி கிரீம்ஸ் ரோடு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆர்.வீரமணி நேற்று தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகி நெசப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவருக்கு நேற்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டது.உடனடியாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீரமணிக்கு நாகரத்தினம் என்ற மனைவியும் கவிதா, சண்முகப்பிரியா, பவித்ரா என்ற மகள்களும் உள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் S.முத்துலக்ஷ்மி அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. ஷங்கரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாய் உயிரிழந்துள்ளார்.இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .
‘தில்லுக்கு துட்டு’,‘சதுரங்க வேட்டை’,‘காக்கி சட்டை’,‘கருப்பன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி இன்று காலமானார். மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர் இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றா? அல்லது உடல் நலக்குறைவா? என எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார். ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன
நடிகர் பவுன்ராஜ் சிவகார்த்திகேயன் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலையே கவிழ்த்துவிடும் அவரது காட்சி இன்றளவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற காமெடி காட்டிச்சிகளில் ஒன்று.
இன்று திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் பவுன்ராஜ் உயிரிழந்தார். இவர் அசோசியேட் டைரக்டராகவும் திரைப்படங்களில் பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.
இவர் இறந்த செய்தியை இயக்குநர் பொன்ராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் (61). இன்று (14.05.2021) அதிகாலை 4 மணிக்குப் பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த பாலமுருகன், அதற்காக சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்றுவந்தார்.
விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல தொடரின் மற்றொரு நடிகர் உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் காலமாகி இருக்கிறார். இந்த சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீரியலில் ஜாக்லினின் தந்தையாகவும் ஊராட்சி மன்ற தலைவராகவும் சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ். இவர் ஏற்கனவே பல்வேறு சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.