மே 2-ந் தேதிக்கு பிறகு இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில் தமிழக மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே ‘காபந்து சர்க்கார்' இருக்கின்ற இந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றின் பரவலை தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், சுமார் 80 கோடி பேர் பயனடைவர் என்றும், இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதாகும் எனவே அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் யாரெல்லாம் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய முடியுமோ அந்த நிறுவனங்கள் “Work from Home” முறையை நடைமுறைப்படுத்தலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என பிரசாந்த் கிஷோர் ரிப்போர்ட் கொடுத்துள்ளார். ஸ்டாலினும் பேட்டிகளில் மே 2ஆம் தேதி புதிய அரசு அமையப் போகிறது என்பதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். இச்சூழலில் சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்ற புதிய யோசனைகளும் அறிவாலயத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறதாம்.
அதில் டாப் லிஸ்டில் இருப்பவர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் பெயர் தானாம். 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திருச்செங்கோட்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
புத்தாண்டு திருநாளாம் யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேசும் மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக் காத்திடும் அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.