>>
பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி மற்றும் தங்கம் போன்ற தொடர்களில் நடித்த சீரியல் ரசிகர்களிடையே பிரபலமானார். மற்றும் கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு நடனத்திலும் கலக்கினார். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என அனைத்து சேனல்களிலும் சீரியல்களிலும் ஸ்ரீதேவி அசோக் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் ஸ்ரீதேவி அசோக் வில்லியாக நடித்து மிரட்டினார். இந்த சீரியல் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நடிகை ஸ்ரீதேவி அசோக் 2019 ஆம் ஆண்டு புகைப்படக் கலைஞர் அசோக்-ஐ திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி அசோக் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க போவது யாரு ? நீங்கள் நினைக்கும் அவரேதான்!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்க உள்ளது என்பது ஏற்கனவே அனைவருமே தெரிந்த ஒன்றுதான் ஆனால் யாரு பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க போகிறார்கள் என்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு டச்சு நிறுவனமான எண்டெமால் ஷைன் நிறுவனத்திடம் இருந்து பானிஜய் என்ற பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது. பானிஜய் உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவிக்காக சில தொடர்களையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மஞ்சள் மீடியா ஆகியவை பானிஜயுடன் இணைந்து OTT வலைத் தொடர் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளன. இதை மனதில் கொண்டு கமல்ஹாசன் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தயாரிப்பார் என்று வதந்தி பரப்பப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய தகவல்களின்படி, பிக் பாஸ் 5 சீசனுக்கான அனைத்து உரிமங்களும் இப்போது பானிஜயிடம்தான் உள்ளன, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார், இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பாவம் கணேசன் சீரியலில் - ஷயீமாவிற்கு பதிலாக தற்போது சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் புகழ்

ஸ்டார் விஜய் டிவியில் தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - சீரியல் புகழ் நடிகை பிரியங்கா புதிதாக இணைந்துள்ளார். இந்த தகவலை நடிகை பிரியங்கா தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார். பாவம் கணேசன் சீரியலில் யமுனா என்ற கேரக்டரில் இதற்கு முன் ஷயீமா ரியால்தீன் என்பவர் நடித்து வந்தார். இந்நிலையில் யமுனா வேடத்தில் நடிகை ஷயீமாவிற்கு பதிலாக தற்போது பிரியங்கா நடித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
குக் வித் கோமாளி சீசன் 3 இல் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து…?

குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது? குட் நியூஸ் இதோ

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்று காத்திருந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது குட்டீஸ் ரசிகர்களிடம் பேசும்போது இன்னும் மூன்று மாதங்களில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கிவிடும் என்று கூறியுள்ளார். இதனை அந்த குட்டீஸ்கள் சமூக வலைதளங்களில் கூறியுள்ளதை அடுத்து அடுத்த சீசனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பூவே உனக்காக சீரியல் கதாநாயகன் விலகல்

பூவே உனக்காக தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி என்னை நீங்கள் கதிர் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவின்றி நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது.

எனக்குத் தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன் என்று பூவே உனக்காக சீரியல் கதாநாயகன் அருண் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சின்னத்திரையில் கலக்கும் டாப் 10 பிரபலங்கள் இவர்களா?

ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற பிரபலங்கள் யார் யார் என்கிற விவரத்தை அண்மையில் ஆங்கிய பத்திரிக்கை வெளியிட்டார்கள்.

1 - ரம்யா பாண்டியன்
2 - ரோஷ்னி ஹரிப்ரியன்
3 - பவித்ரா லட்சுமி
4 - நட்சத்திரா நாகேஷ்
5 - ஆயிஷா
6 - ஷிவானி நாராயணன்
7 - ஆல்யா மானசா
8 - திவ்யதர்ஷினி
9 - கிகி விஜய்
10 - சாந்தினி தமிழரசன்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 நிறுத்தம்

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் நேற்றொடு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகாது. கொரோனா தொற்று முடிந்து மீண்டும் சீரியல் படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் இந்த சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கும் என தெரிகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
500 வது எபிசோட் கடந்து இதயத்தை திருடாதே சீரியல் சாதனை

2020 ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட இதயத்தை திருடாதே சீரியல். காதல், சண்டை, பரபரப்பு, அதிரடி திருப்பம் என விறுவிறுப்பான கதை நகர்வுகளால், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மக்களின் அமோக வரவேற்பால், தற்போது 500வது எபிசோடையும் கடந்திருப்பதால், ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நாடகத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவுக்கும் , பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யனுக்கும் திருமணமா?

நடிகை ஷபானாவின் ரிலேஷன்ஷிப் குறித்து நிறைய வதந்திகள் வந்துள்ளன. சமீபத்தில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் புகழ், நடிகர் ஆர்யனை அவர் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆர்யனிடம், “நான் உங்களை திருமணம் செய்துக் கொள்ளலாமா?” என ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்யன். “ஷபானா... இவங்களுக்கு என்ன சொல்லட்டும்?” எனக் கேட்டிருந்தார். இதனை தன் பக்கத்தில் பகிர்ந்த ஷபானா, ‘மைன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் ஷபானாவும் ஆர்யாவும் காதலில் இருப்பதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 476 of 477 )   NEXT |  LAST