நம்முடைய தினசரி கடமைகள் எது?
நம்முடைய தருமம் எது? அதற்கு மூலம் எது? போன்ற கேள்விகளுக்கு விடை வேண்டியிருக்கிறது.
தருமம் என்பது நமது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தரும வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும்.
வேதமே எல்லா தருமத்திற்கும் ஆதாரம்.
- மஹா பெரியவா
நாளை மகாளய அமாவாசை வருவதையொட்டி, பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக கோவில்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருதமலை முருகன் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் மாசாணியம்மன் கோவில்கள் ஆகிய 4 கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.