டிச 27 – 2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 52 கோல் கணக்கில் தன்னை முந்திய எம்பாப்பே மற்றும் ஹாரியை ஒரே போட்டியில் பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
அல் நாசர் மற்றும் அல்-இத்திஹாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில், கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்துள்ளார்.
அடுத்ததாக சாடியோ மானே கோல்கள் அடிக்க அல் நாசர் 5 – 2 என அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையில் ரொனால்டோ 2 கோல்கள் அடித்ததன் மூலம் 2023ஆம் ஆண்டில் அவரது கோல் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் அவர், தன்னை விட அதிக கோல்கள் அடித்திருந்த கிலியன் எம்பாப்பே மற்றும் ஹாரி கேன் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தன் வசமாக்கியுள்ளார்.
மத்திய அரசின் அர்ஜுனா மற்றும் தயான்சந்த் கேல் ரத்னா விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு 'ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது; ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ்க்கையை வாழ விரும்புவர்' - வினேஷ் போகத்