காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லாவுக்கு பரிசீலிப்பதாக உறுதியளித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக கலந்துரையாடல் மேற்கொண்டார்.
ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருந்தது வாக்னர் குழு. தனியார் ராணுவம், புதினின் தனி ராணுவம் எனப் பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்ட இந்தக் குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராகவே களமிறங்கியிருக்கிறது.
ரஷ்யாவுக்கு உக்ரைனின் பெரும் பகுதியை கைப்பற்ற உதவிய இந்தக் வாக்னர் குழு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக இந்தக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் (Yevgeny Prigozhin) குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், ரஷ்யாவில் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்த்துவேன் என்றும் சபதமேற்றிருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ``நாம் இப்போது உலகளவில் ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆயுதக் குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும்.
மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். வாக்னர் குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தேச துரோகமாகும்.
நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம். இந்த ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசியிருக்கிறார். புதினின் பேச்சைத் தொடர்ந்து, வாக்னர் குழு, "ரஷ்யா விரைவில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்" எனத் தெரிவித்திருக்கிறது.
உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போராடி வரும் நிலையில் பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன....
விரிவாக படிக்க >>