கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிமொழி சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த நிலையில் தற்போது 2-வது முறையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தொகுதி எம்பியும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இணைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகியுள்ள நிலையி்ல், கனிமொழி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிமொழி சிகிச்சைக்கு பின் மீண்டு வந்த நிலையில், 2 கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டடுள்ளார். ஆனாலும் தற்போது 2-வது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.