தமிழக அரசு அலுவலகத்தில் மாதம் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
திருச்சுளி பிளாக் அலுவலகத்தில் Aspirational Block Fellow பணியிடங்களை ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு 15.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Aspirational Block Fellow பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
Fellow வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும். தரவு பகுப்பாய்வு பற்றி தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு யுபிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் அல்லது குரூப் I தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்திய முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Aspirational Block Fellow தேர்வு செயல் முறை:
1. Short Listing
2. Interview
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
உரிய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம், மேம்பாட்டுப் பிரிவு, விருதுநகர் (கீழே உள்ள முகவரி) என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ 15 நவம்பர், 2023 அன்று மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.
ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.
1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?
ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.