Advertisement

A new low pressure area is forming - Heavy rain will lash these 7 districts

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்த 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை

தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதன் காரணமாக, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் மாலை வேளையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. அப்ச‌ர்வேட்ட‌ரி, பேருந்து நிலையம், அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஆன‌ந்த‌கிரி, க‌ல்லுக்குழி, நாயுடுபுர‌ம், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையால், சேரன்மகாதேவி அருகே கூனியூரில் சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி, சாலையில் வெளியேற்றினர். இது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரேஷன் கடையை சூழ்ந்திருப்பதால் அந்தப் பகுதிகளில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து சுகாதார நிலையம் மற்றும் ரேசன் கடையை சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு… தென்காசி மாவட்ட மழை நிலவரம் இதோ.!

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை உருவாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை மறுதினம் வாக்கில் உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇

Winning the toss is harder than batting

பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது

இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு, நான் 50 60 ரன்கள் என்று கூறுவேன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

“GST: Not a tax… a waybust!”

“ஜிஎஸ்டி: வரி அல்ல… வழிப்பறி!” - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்." என்று கடுமையாக விமர்சித்துள்ளளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Suspension of nomination of many important candidates!

பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனு நிறுத்திவைப்பு! கடும் வாக்குவாதம்..

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024:  தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்சிக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Gold price touched Rs.50 thousand per pound

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST | PREV   ( Page 1 of 15333 )   NEXT |  LAST